India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஏப்ரல் 04) சேலம் மாவட்டம் உருவான நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவான சேலம், இன்று 234-ஆம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் எழில்மிகு ஏற்காடு, சேகோ ஜவ்வரிசி, சேலத்து மாம்பழம், கோட்டை மாரியம்மன் கோயில், கஞ்சமலை, சங்ககிரி கோட்டை, சேலம் வெண்பட்டு, உள்ளிட்டவை சேலம் மாவட்டத்தின் வரலாற்றை பறை சாற்றுகின்றன.

மே 15- க்குள் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம்.தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே,
சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள்,வணிக சங்கங்கள்,உணவு நிறுவனங்கள்,பள்ளி, கல்லூரிகள்,தொழிற்சாலை சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கிட ஆட்சியர் வேண்டுகோள்

கோடைக் காலம் முடியும் வரை கால்நடைகளுக்கு தினமும் சோடா உப்புகளை கொடுக்க வேண்டும். கறவை மாட்டிற்கும் நாள் ஒன்றுக்கு, 70 லிட்டருக்கு மேல் தண்ணீர் தர வேண்டும். தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர்ச்சத்துக்கள் சேர்ப்பதன் மூலமும், வெப்ப அயற்சியின் தாக்கம் மற்றும் உற்பத்தி குறை வினை தவிர்க்கலாம் என சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தெரிவித்தார்.

எதிப்பான் ரசாயனம் தெளித்து மாம்பழங்கள், வாழைப்பழங்களை பழுக்க வைத்தால் வியாபாரிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், பழக்குடோன்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது மாம்பழங்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சோதனை செய்தும், பழ குடோன்களையும் கண்காணித்தும் வரப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த வியாபாரிகளுக்கு SHARE பண்ணுங்க!

எடப்பாடி அருகே முத்தையம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில். கடந்த 10 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் கடந்த 31ஆம் தேதி விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோயில். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையைச் சுற்றி, பாதிக்கப்பட்ட தோல் பகுதியைச் சுற்றி கோயிலின் காந்த குளத்தில் போட்டால் தோல் வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சேலம், ஆத்தூர் வழியாக இயக்கப்படும் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் (16573) நாளையும், மறுமார்க்கத்தில், புதுச்சேரி- யஷ்வந்த்பூர் ரயில் (16574) நாளை மறுநாளும் (ஏப்ரல் 05) முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை 2 நாட்கள் மட்டும், உடனடி வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிறசிக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24- ஆம் தேதி முதல் ஏப்ரல் 13- ஆம் தேதி வரை, இம்மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

பிரக்யாராஜ் மகா கும்பமேளா நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 04) முதல் சேலம்- அரக்கோணம், அரக்கோணம்- சேலம் மெமு ரயில்கள் (16087/16088) இயக்கப்படும் என்றும், இந்த ரயில் சேவையைப் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களைத் தவிர்த்து 5 நாட்கள் மட்டும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01005) வருகிற 9-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.