India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் இயற்கை சூழ்ந்த மலைகளில் அமைந்துள்ளது கந்தாஸ்ரமம். இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கந்தனை வழிபட்டுச் செல்கின்றனர். முருகனும் அவ்ரது தாயார் பார்வதியும் எதிர் எதிர் சன்னதியில் இருப்பது இந்தக் கோயிலில் மட்டும் தான். இங்குள்ள முருகனை தரிசித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சேலம் மேற்கு வட்டம் மஜ்ரா கொல்லப்பட்டி, இரும்பாலை மெயின் ரோடு, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

“சேலம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 622 திருநங்கைகளில் 569 பேருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு முகாம் நடத்தி விரைவில் அடையாள அட்டை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்; படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்” என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய வழி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம். மேலும், பொதுமக்கள் நலன் கருதி வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைக்கடிகாரம் மற்றும் கடிகாரம் பழுதுபார்க்கும் 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு நேரடியாகவோ (அ) இந்த <

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளாளக்குண்டம் கிராமத்தில் உலகிலேயே மிகப்பெரிய நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. 45 அடி உயரம் கொண்ட அதிகார நந்தி சிலையின் வயிற்று பகுதியில் பக்தர்கள் சென்று தியானம் செய்ய தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகார நந்திச் சிலையை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.

தென்னிந்நிய சினிமா வளர்ந்தது கோடம்பாக்கம் என்றாலும், அதனின் தொடக்கம் சேலம் தான். ஆம், சேலத்தை மையமாகக் கொண்ட ’மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தில் இந்தி, சிங்களம் உட்பட பல மொழிகளில் 150 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மலையாள சினிமாவின் முதல் பேசும் படத்தை தயாரித்த பெருமையும் இந்நிறுவனத்தையே சாரும். ஏற்காடு சாலையில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் தான் இந்திய சினிமா பரிணாமத்தின் நுழைவு வாயில்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 3.30 லட்சம் பயணிகளிடம் இருந்து ரூ.22.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 16% அதிகம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் முறையாக டிக்கெட் எடுத்து உரிய வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sorry, no posts matched your criteria.