Salem

News November 3, 2024

சேலம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு மற்றும் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சேலம் மாவட்டத்தில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதைத்தொடர்ந்து பயணிகள் வருகைக்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

News November 2, 2024

சேலம் இளைஞர்களுக்கு ஓர் அரிய வேலைவாய்ப்பு

image

சேலத்தில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓர் அரிய வேலைவாய்ப்பு.குறுகிய காலத்தில் அரசு சான்றிதழ், உதவித்தொகையுடன் அதிநவீன பயிற்சியுடன் முன்னணி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. குறைந்த இடங்களே உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 94898-77802, 95009-80430 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

News November 2, 2024

சேலம் அருகே பட்டியல் சமூகத்தினர் மீது தாக்குதல்

image

சேலம் அருகே உள்ள செம்மண் திட்டு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பட்டியல் சமூகத்தினர் மீது ஆதிக்க சமூக இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

News November 2, 2024

சேலத்தில்  பரவலாக நல்ல மழை

image

சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். நவ.01 முதல் சேலத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2024

சேலத்தில் 15 லட்சம் பேர் பயணம்!

image

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, ஓசூர், கோவை, பெங்களூரு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 15 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2024

ரயில் மோதி சேலம் தொழிலாளர்கள் பலி

image

கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 துப்புரவு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றுக்குள் விழுந்த ஒரு சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 2, 2024

சேலத்தில் ஒலி மாசு 78.3 டெசிபல் ஆக பதிவு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2 இடங்களில் சேலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒலி மற்றும் காற்று மாசுவை அளவிடும் கருவிகளைப் பொருத்தியிருந்தனர். அதன்படி, தீபாவளி தினத்தன்று மட்டும் சேலத்தில் ஒலி மாசு 78.3 டெசிபல் ஆகவும், காற்றின் தரக்குறியீடு 174 ஆகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

நாளை எடப்பாடி வருகிறார் இபிஎஸ்

image

எடப்பாடியில் நாளை நடைபெற உள்ள ஊழியர் கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கவுள்ளார். எடப்பாடி நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி நகர செயலாளர் முருகன் அறிவித்துள்ளார்.

News November 2, 2024

கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலாளர் கைது

image

சேலம் மாவட்டம், ஓமலூர் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் கிளை மேலாளர் கருப்பூரைச் சேர்ந்த பச்சியப்பன் (37) ரூபாய் 26.37 லட்சம் கையாடல் செய்ததாக வந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பச்சியப்பனை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த கணக்காளர் சத்யா என்பவரை தேடி வருகின்றனர்.

News November 2, 2024

சேலத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 8 பேர் மீது வழக்கு

image

பட்டாசுகளை வெடிக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், சேலம் மாவட்டத்தில் போலீசார் கண்காணித்து வந்தனர். அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!