India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். அதைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று 72-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டி உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. இதனால், சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் மழையால் ஆங்காங்கு மழை நீர் குளம் போல் தேங்கியது. மேலும், தமிழகத்திற்கு அடுத்த 2 நாள்கள் மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற அக்.25- ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று மாலை பெய்த கனமழை காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் நிரம்பியது. பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் ஆசிரியர்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கிடும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதார் அட்டை, குடும்ப அட்டை சான்று நகலுடன் சேலம் ஆட்சியரகத்தில் அறை எண்.109-ல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள வீரக்கல் கிராமம் கொத்திக்குட்டை ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
“உதயநிதி ஸ்டாலின் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் தான் உண்மையான தேர்தல், பைனல் மேட்ச்; அதில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். தி.மு.க. விளையாட்டை ஆரம்பித்துவிட்டீர்கள்; அந்த விளையாட்டுக்கான கோப்பையை அ.தி.மு.க. தான் வெல்லும்” என்று சேலம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக இன்று (அக்.22) சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகைப்புரிந்த நிலையில், அவரை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் புத்தகம் வழங்கி வரவேற்றார். தொடர்ந்து, ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
சேலம் கொங்கணாபுரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தி.மு.க. கூட்டணியை மட்டும் நம்பி உள்ளது. கூட்டணி தலைவர்கள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும். திமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்தது? சேலம் மாவட்டத்தில் ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா இன்றும் திறக்கப்படவில்லை” என்றார்.
Sorry, no posts matched your criteria.