India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நங்கவள்ளியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமியிடம், அவரது மகன் வெங்கடாசலம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2021 ஆண்டு வெங்கடாசலத்தை கடப்பாரையால் தாக்கியுள்ளார் பழனிச்சாமி. இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம் இறந்து விட்டார். இந்த வழக்கு மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துநிலையில், விசாரணை முடிந்து பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று அதிகாலை நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார். வயதின் அடிப்படையில் பல்வேறு கிலோமீட்டர் தூர பிரிவு ஓட்டப்பந்தயத்தில், 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சேலம் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் ஓமலூர் காவல்துறையினர் நேற்று (ஜன.04) அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்த முயற்சித்த போது கார் நிற்காமல் சென்றது. விரட்டிச் சென்று காவல்துறையினர், காரை மடக்கிய நிலையில், காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர். காருக்குள் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன 4) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம், புத்திரகவுண்டம்பாளையம் ஊராட்சி 6வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (67). இவரை அவரது தம்பி சிகாமணி மகன் செல்வராஜ்,( 30) நேற்று மது போதையில் கழுத்தை துண்டாக வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று செல்வராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 4) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் ஓமலூர் காவல்துறையினர் இன்று (ஜன.04) அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்த முயற்சித்த போது கார் நிற்காமல் வேகமாக சென்றது. விரட்டிச் சென்று காவல்துறையினர், காரை மடக்கிய நிலையில், காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர். காருக்குள் இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை!
நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட உடையம்பட்டி ஏரிக்கு அதிகப்படியான நீர் வரத்தினால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதை சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோல் இந்த ஏரி நிரம்பி இருந்தது. கடந்த வருடம் போதிய பருவ மழை இல்லாத காரணத்தால் இந்த ஏரி வறண்டு கிடந்தது குறிப்பிடதக்கது.
இணைப்பு ரயிலின் வருகை தாமதமாக சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- லோக்மான்யா திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (11014) இன்று (ஜன.04) காலை 08.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், 4.40 மணி நேரம் தாமதமாக நண்பகல் 01.30 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அடங்கிய குழுவினர், தொடர்ந்து ரயில்கள், ஸ்டேஷன்களில் பரிசோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை டிக்கெட் இன்றி பயணித்தவர்கள், கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்றவர்கள் என ரூ.15.88 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. டிசம்பரில் மட்டும் ரூ1.96 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.