India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றியவர் சண்முககுமார் (35). இவர் தண்டனை கைதியிடம் பணம் பெற்று மொபைல் போன், கஞ்சா வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை அளித்த பின், கடந்த பிப்ரவரியில், சண்முககுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சண்முககுமாரை பணி நீக்கம் செய்து சிறை எஸ்.பி. வினோத் உத்தரவிட்டார்.

மோகனப்பிரியன் (20) என்பவர் கடந்த 15-ஆம் தேதி சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்த மோகனப்பிரியனை போலீசார் நேற்று(ஏப்.29) கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்: மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள் ▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077 ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100 ▶️விபத்து உதவி எண் 108 ▶️தீ தடுப்பு, பாதுகாப்பு : 101 ▶️விபத்து அவசர வாகன உதவி : 102 ▶️குழந்தைகள் பாதுகாப்பு : 1098 ▶️பேரிடர் கால உதவிக்கு 1077 ▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி : 1091 ▶️வாக்காளர் உதவி எண் : 1950. இதனை மறக்காமல் ஷேர் செய்யுங்கள்.

சேலம்: மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள் ▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077 ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100 ▶️விபத்து உதவி எண் 108 ▶️தீ தடுப்பு, பாதுகாப்பு : 101 ▶️விபத்து அவசர வாகன உதவி : 102 ▶️குழந்தைகள் பாதுகாப்பு : 1098 ▶️பேரிடர் கால உதவிக்கு 1077 ▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி : 1091 ▶️வாக்காளர் உதவி எண் : 1950. இதனை மறக்காமல் ஷேர் செய்யுங்கள்.

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ஓசூர் நிறுவனத்தின் பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வரும் மே.3- ஆம் தேதி காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை சேலம் ஜங்ஷன் அருகில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. கல்வி தகுதி; 12-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை. மேலும் விவரங்களுக்கு 0427-2401750 அழைக்கவும்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் நாளை(மே 1) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் நாளை(மே 1) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

ஜாமியா கல்வி அறக்கட்டளை மற்றும் சேலம் முஸ்லிம் கல்வி சங்கம் சார்பில் அனைத்து சமுதாய பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பேச்சு பயிற்சி மே 01- ஆம் தேதி சேலம் கோட்டை ஸ்டோக்ஸ் ஹாலில் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு 63826-67729, 94432-17286 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

சேலம்: வாழப்பாடி சுக்கியம்பாளையத்தை சேர்ந்த 55 வயதான விவசாயி வடிவேல் தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், சரியான விவசாய மகசூல் இல்லாததால் கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததுள்ளார். இதையடுத்து, நிதி நிறுவனத்தின் தொந்தரவு தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம்: வாழப்பாடி சுக்கியம்பாளையத்தை சேர்ந்த 55 வயதான விவசாயி வடிவேல் தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், சரியான விவசாய மகசூல் இல்லாததால் கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததுள்ளார். இதையடுத்து, நிதி நிறுவனத்தின் தொந்தரவு தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.