India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.25) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

இந்தியாவின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிற்பக் கலைத்துறையில் சாதனை படைத்த இவர், தஞ்சைப் பெரிய கோயிலின் பாம்பு சிற்பம் மற்றும் குடியாத்தத்தில் உள்ள 13 அடி உயர நடராஜர் சிலையையும் செதுக்கியவர். குடியரசு தினத்தை முன்னிட்டு இவரது கலைப்பணியைப் பாராட்டி மத்திய அரசு இந்த உயரிய விருதை அறிவித்துள்ளது.

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிஎஸ்பி பாபு மற்றும் பாதுகாப்பு ஆணையாளர் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான போலீசார், ரயில்களில் தீவிர சோதனை நடத்தினர்.மேலும் பயணிகள் உடைமைகள், நடைமேடைகள்,பார்சல் அலுவலகம் மற்றும் ஓய்வறைகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ₹22 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு, கடந்த ஜனவரி 14-ல் திறக்கப்பட்ட குமரகிரி ஏரி பத்தே நாட்களில் சேதமடைந்துள்ளது. நடைபாதை படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் திறக்கப்பட்ட இந்த ஏரியின் கரைகளில் பதிக்கப்பட்ட கற்கள், தரக்குறைவான கட்டுமானப் பணியால் தற்போது பெயர்ந்து காணப்படுகின்றன.சில நாட்களிலேயே ஏரி சேதமடைந்தது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

சேலம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

ஆத்தூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாதேஸ்வரன், இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன், கடந்த 2011 – 2016 காலகட்டத்தில் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ, திமுகவில் இணைந்தது சேலம் அதிமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஓசூரைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, சேலத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி விளையாடிக்கொண்டிருந்த போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். மாணவியின் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ள CMஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 04272418735 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Sorry, no posts matched your criteria.