India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா உத்தரவின் பேரில் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் கடந்த மாதத்தில் சேலம் கோட்டம் வழியாக இயங்கும் ரெயில்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்த 16,062 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்து 311 அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த காது கேளாத வாய் பேசாத, லிட்டில் பிளவர் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆர்.சஞ்ய்குமார் என்பவர், நவம்பர் 7 அன்று பிறந்தநாள் காணும் உலகநாயகன் கமல்ஹாசன் உருவத்தை 3500 தீக்குச்சிகள் கொண்டு 22 மணி நேரம் செலவு செய்து ஓவியமாக வரைந்து வாழ்த்து கூறி அசத்தியுள்ளார். தொடர்ந்து கமலஹாசன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எம்.ஐ.எஸ் அனலிஸ்ட் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.ஐ.எஸ் அனலிஸ்ட் பணிக்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், அறை எண்:207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம்- 636001 என்ற முகவரிக்கு வரும் நவ.15-க்குள் அனுப்ப வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி நகரில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று (நவ.05) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். மேலும், திறக்கப்பட உள்ள புதிய வகுப்பறைக் கட்டடங்களையும் பார்வையிட்டார். அதே வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி வகுப்பறையும் பார்வையிட்டார்.
எடப்பாடி தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 234/77 திட்டத்தின் கீழ் விரிவான ஆய்வு மேற்கொண்டோம். 234/77 திட்டத்தின் 232ஆவது ஆய்வு செய்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டுமானப் பணிகள், மாணவிகளுக்கான போக்குவரத்து வசதி மற்றும் புதிய சமையல் அறை தேவைகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று பார்வையிட்டார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற நவம்பர் 15- ம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. ➤சேலத்தில் புத்தகத் திருவிழா நவம்பவர் 29 முதல் டிசம்பர் 9 வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. ➤தலைவாசலில் ரூ.37.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜேந்திரன் இன்று வழங்கினார். ➤எடப்பாடியில் இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பல்வேறு பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் விதிகளை மீறி ஆட்சிக் குழு உறுப்பினரை நியமனம் செய்த பல்கலைக் கழகத்தின் பதிவாளர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடவும், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை ஆளுநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் சரகத்திற்குட்பட்ட ஓமலூர், மேட்டுப்பட்டி, தொப்பூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் 804 ஆம்னி பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு சோதனை நடத்தினர். இதில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 93 ஆம்னி பேருந்துகளுக்கு ரூபாய் 4.33 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாநகராட்சியில் பதிவுச் செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின், வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெயருடன் கூடிய சான்றிதழினை இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். பெயரினை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயரினை பதிவு செய்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.