Salem

News January 24, 2025

சேலத்தில் பல கோடி ரூபாய் பண மோசடி? 

image

அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில், முதலீடு செய்தால் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என பொதுமக்களிடம் பணம் பெற்ற 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.அறக்கட்டளை இயங்கிய திருமண மண்டபத்தில் ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம்,13 கிலோ வெள்ளி பறிமுதல். கைதான விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் மூவரும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

News January 24, 2025

சேலத்தில் ரஞ்சி டெஸ்ட்; தமிழ்நாடு 301 ரன்கள் குவிப்பு

image

சேலத்தில் நடைபெறும் டி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-சண்டீகர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சண்டீகர் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், ஆண்ட்ரே சித்தார்த்தின் அபார சதத்தால் 301 ரன்கள் குவித்து ஆல்-அவுட்டானது. தற்போது சண்டீகர் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

News January 24, 2025

BREAKING சேலம்: கடத்தப்பட்ட இளம் பெண் மீட்பு

image

சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீட்டுக்குள் புகுந்து நேற்று (ஜன.23) கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார். பென்னாகரத்தைச் சேர்ந்த ரோஷினி காதல் திருமணம் செய்தது பிடிக்காமல், பெற்றோர் கடத்தியதாக புகார்; கணவர் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரோஷினியை மீட்ட எடப்பாடி போலீசார் அவரது பெற்றோர், அக்கா, மாமாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

News January 24, 2025

சேலம் மாநகரில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாநகரில்இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9 மணி ராஜஸ்தானி சங்கம் சார்பில் சங்க கட்டடத்தில் அக்குபஞ்சர் பரிசோதனை சிகிச்சை முகாம்., 2) காலை 10 மணி கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி புதிய வகுப்பறைகளை அமைச்சர் திறந்து வைப்பு, 3) காலை 10 மணி அரசு மகளிர் கல்லூரி என் எஸ் எஸ் மாணவிகள் துப்புரவு முகாம் 4) மாலை 6 மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி.

News January 24, 2025

சேலம் விமான நிலைய விரிவாக்க பணி தீவிரம்

image

சேலம் விமானநிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையிலபொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கீர்த்திகரன் தலைமையிலான அதிகாரிகள், முதல்கட்டமாக எடுக்கப்படும் 177 ஏக்கரில் உள்ள கட்டிடங்கள், அதன் மதிப்புகள் ஆகியவைகளை அளவீடு செய்து மதிப்பிடும் பணியை நேற்று தொடங்கினர். இதில் வீட்டின் தரம்,மின்சாதன பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், மாட்டு கொட்டகைகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 

News January 23, 2025

ஜன 29 முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கான குறைதீர்க்க கூட்டம் வருகின்ற 29ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டங்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிரிந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

மாவட்ட காவல் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 23, 2025

கைத்தறி நெசவாளர்களுக்கு மானிய விலையில் இயந்திரங்கள்

image

நெசவுத் தொழிலுக்கான இயந்திர மானிய விலையில் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கைத்தறி துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 04272414745 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News January 23, 2025

சேலம் கால்நடை பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு இன்று காலை தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிய வருகிறது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கட்டிடங்கள் அனைத்து பகுதிகளும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News January 23, 2025

ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தில் 1,458 வீடுகள் சீரமைப்பு

image

சேலத்தில் ரூ.26.13 கோடியில் 3,944 வீடுகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 1,458 வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,486 வீடுகள் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024-25 ஆம் நிதியாண்டிற்கு 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,500 வீடுகள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு பெறப்பட்டு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!