Salem

News November 11, 2024

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் 

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (நவ.11) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News November 11, 2024

சரவணன் கொலை வழக்கில் 10 பேர் சிறையில் அடைப்பு

image

வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த சரவணன் கொலை வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான, ரவுடி காட்டூர் ஆனந்தனின் மற்றொரு மைத்துனன் கார்த்தி(33). வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த உறவினர் கந்தசாமி(32). சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த பூபாலன்(27). மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த ஹரி (எ) மதியழகன்(33) உள்ளிட்ட 10 பேர் போலீசில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.

News November 11, 2024

முதல் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை

image

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவு ஸ்தூபி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வாளர் சங்கத்தின் சார்பில் இன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் பர்ன பாஸ் தலைமையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் தாரை குமரவேல் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

News November 11, 2024

மலைப்பாதையில் “டிரக்கிங்” செல்ல அழைப்பு

image

சேலம்: தமிழக வனத்துறை சார்பில், மலை பிரதேசங்களில், ‘டிரக்கிங்’ செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. இதன்படி சேர்வராயன் மலைத்தொடரில், 3 வழித்தடங்களில் ‘டிரக்கிங்’ செல்லலாம். http://www.trektamilnadu.com/page/about -ல் முன்பதிவு செய்யலாம். முன்பதிவில் நாள், நேரம், எத்தனை பேர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயணியருடன் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கைடுகள் செல்வர். அவர்கள் மரங்கள், பறவை குறித்து விளக்கமளிப்பர்.

News November 11, 2024

எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் எந்த ஊர் தெரியுமா?

image

மறைந்த பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜனின் (வயது 66) உடலுக்கு எழுத்தாளர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 1958- ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சேலத்தில் பார்த்தசாரதி- இந்திரா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் இந்திரா சவுந்தரராஜன். கடந்த 40 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வந்தார். திரைப்படத்துறையிலும் கால்பதித்த அவர் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

News November 11, 2024

சேலத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

சேலத்தில் நாளை(12.11.24) பல்வேறு பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், மல்லியக்கரை, கரூப்பூர், மேட்டுப்பட்டி, உடையாப்பட்டி, நங்கவள்ளி, கூடமலை ஆகிய துணை மின்நிலையங்களின் கீழ் உள்ள ஊர்களுக்கு நாளை காலை(9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மக்களே உங்க துணை மின்நிலையம் எதுனு கொஞ்சம் பாத்துக்கோங்க. ஷேர் பண்ணுங்க

News November 10, 2024

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு கேடயம்

image

தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 114 சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, விருதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆனைப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை கேடயத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் நவ.14- ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்படவுள்ளது.

News November 10, 2024

சிறையில் பிளேடால் கையை அறுத்து கொண்ட கைதி

image

சேலம் மாவட்டம் தைலானுரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி அய்யந்துறை இன்று சேலம் மத்திய சிறையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென்று பிளேடால் கை, கால்களில் அறுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிக்கு சேலம் மத்திய சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News November 10, 2024

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நீக்கம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த நான்காம் தேதி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கொடுத்த மனுவை கவனக்குறைவால் கீழே போட்டுவிட்டு சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் மனு அளிக்க பொதுமக்களே எடுத்து வந்து மீண்டும் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார் என கலெக்டர் உத்தரவு அளித்துள்ளார்.

News November 10, 2024

சேலம் மத்திய சிறையில் புத்தகக் கண்காட்சி

image

சேலம் மத்திய சிறையில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை சிறைக் கண்காணிப்பாளர் வினோத் துவக்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சியில் 10 அரங்குகள் அமைக்கப்பட்டு, கதை, கட்டுரை, ஓவியம் மற்றும் அரங்கம் அமைத்த சிறை கைதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் சிலம்பரசன் கலந்து கொண்டு பேசினார்.

error: Content is protected !!