Salem

News January 25, 2025

பிப்.5 வெண்ணங்குடி முனியப்பன் திருவிழா

image

சேலத்தின் காவல் தெய்வமாக நம்பப்படும் அருள்மிகு வென்னங்குடி முனியப்பன் திருக்கோயில் தை மாதம் திருவிழா தொடங்க உள்ளது. வருகின்ற பிப்ரவரி 5ம்தேதி புதன்கிழமை பொங்கல் வைபவம் 6ம் தேதி வியாழக்கிழமை அலகு குத்துதல் வைபவம் நடைபெற உள்ளது. திருவிழாவில் கலந்து கொண்டு வென்னங்குடி முனியப்பன் அருளைப் பெறுமாறு விழாக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மற்ற பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

News January 25, 2025

ரஞ்சி டிராபி;வலுவான நிலையில் தமிழ்நாடு அணி

image

வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ்நாடு அணி சண்டிகரை எதிர் கொண்டு ஆடி வருகிறது. இதில் முதலில் விளையடிய தமிழ்நாடு அணி 301 ரன்களுக்கும், சண்டிகர் 204 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.  இதனையடுத்து 2வது இன்னிங்ஸை விளையடிய தமிழ்நாடு அணி 305/5 டிக்ளேர் செய்தது. இதனால் சண்டிகர் அணிக்கு 406 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

News January 25, 2025

இன்றைய இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 25 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 25, 2025

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

image

குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதியின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கவுள்ள ஆட்சியர்!

image

சேலம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா-2025 சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளையதினம் 26/01/2025 சிறப்பாக நடைபெறவுள்ளது. இக்குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இ.ஆ.ப. காலை 08.05 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கௌரவிக்க உள்ளார்.

News January 25, 2025

’பெண்கள் சேவை மையத்தில் தற்காலிக பணி’

image

சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி ஆகியவற்றை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ’சகி பெண்கள் ஒருங்கிணைந்து சேவை மையம்’ செய்து வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427 2413213 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இதை தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்யூங்கள்.

News January 25, 2025

விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்..ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டு தொழிற்கல்வி பயிற்சி நிலையங்கள் அமைப்பதற்கான மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும் இதற்கான கடைசி நாள் பிப்ரவரி மாதம் 28 என்றும் அதற்குள் சம்பந்தப்பட்ட தொழிற்கல்வி பயிற்சி நிலையங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

News January 25, 2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் 1,817 பேருக்கு பணி

image

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 1,817 பேர் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும் 682 பேருக்கு ரூபாய் 37.66 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் துணை இயக்குநர் மணி தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

சேலத்தில் குழந்தை அடித்து கொலை; போலீசார் விசாரணை

image

குகைப் பகுதி சேர்ந்த பசுபதி -சண்முகப்பிரியா தம்பதியின் மூன்று வயது ஆண் குழந்தையை அவரது உறவினர் தமிழரசன் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 25, 2025

“போதைப் பொருட்களை வேண்டாம் என்று சொல்லுங்கள்”

image

சேலம் போலீசார் நேற்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “say no to drugs”என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளனர். இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக போலீசார், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!