India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜன.26) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். விழாவில் காவல்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று (ஜன.26) நடைபெற்ற 76வது குடியரசுத் தின விழாவில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். விழாவில், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., துணை மேயர் சாரதாதேவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேலம் மாவட்ட வெற்றித் தமிழர் பேரவை தொடக்க விழா, இன்று (ஜன.26) மாலை 04.30 மணிக்கு சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
தமிழக காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 23 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் மேச்சேரி அழகா கவுண்டனூரைச் சேர்ந்த சென்னை லஞ்ச ஒழிப்புமற்றும்ஊழல் ஒழிப்புதடுப்புதுறை ஐ.ஜியாக சென்னையில் பணிபுரிந்து வரும்துரை குமார்குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் (ஜன.26) இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8 மணி குடியரசு தினம் ஆட்சியர் கொடியேற்றம் காந்தி ஸ்டேடியம். 2) காலை 8 மணி மேயர் கொடியேற்றம் மாநகராட்சி அலுவலகம். 3) காலை 9 மணி தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு முகாம் கருப்பூர். 4) காலை 9:30 மணி காங்கிரஸ் கொடியேற்றம். 5) காலை 10 மணி கம்பன் கழக விழா இரண்டாம் நாள் ஏவிஆர் மண்டபம்.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சேலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 6ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை விற்றதாக சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேரில் விசாரணை செய்ததில், குழந்தையை யார் கவனிப்பது என தெரியாமல் அவரது தம்பி ரமேஷ், ரூ.3.20 லட்சத்திற்கு விற்று, பைக்கியும், வீட்டிற்கு ரூ.1.20 லட்சம் கொடுத்துள்ளார். பின் குழந்தையை மீட்ட போலீசார், சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
“சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது; கடந்த ஓராண்டில் மட்டும் 28.40 கோடி பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்; 2023-ம் ஆண்டு சுற்றுலாக் கொள்கையின் படி 300 இடங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டன. வெளிநாட்டு பயணிகள் வருகையில் தமிழகம் 6ஆவது இடம்” என்று சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 25 இரவு அதிகாரிகள் விவரம்.
Sorry, no posts matched your criteria.