Salem

News January 29, 2025

இளம் வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்ட கண்காணிப்பு அலகின் தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இளம் வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்களை https://salem.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்டப் புள்ளியியல் அலுவலகம், 310, 3வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் – 636 0OI என்ற முகவரிக்கு வரும் பிப்.07- க்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

சேலம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும்அசம்பாவிதங்களை தவிர்க்கவும்சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.காவல்துறைஉட்கோட்டத்திற்குட்பட்டசேலம் ஊரகம்,சங்ககிரி,ஆத்தூர்,ஓமலூர்,மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று 28-1-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம்.

News January 28, 2025

நாதகவிலிருந்து மேலும் 500 பேர் விலகல்

image

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் ரகு உள்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் நாம் தமிழர் கட்சியில் முன்னுரிமை வழங்கப்படுவதாக ரகு குற்றம் சாட்டியுள்ளார்.

News January 28, 2025

பாமக ஒரு சமுதாயத்துக்கானது அல்ல: மருத்துவர் ராமதாஸ்

image

“பாமக ஒரு சமுதாயத்துக்கானது அல்ல; அனைத்து சமுதாய மக்களுக்கானது; பாமக அனைவருக்காகவும் பாடுபடும்; அதில் வஞ்சனையோ, ஏற்றத்தாழ்வோ இருக்காது. பெண்களே மெஜாரிட்டி வாக்காளர்கள்; அவர்கள் நினைத்தால் மாற்றம் கொண்டு வர முடியும்” என சேலத்தில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார்.

News January 28, 2025

ஜன 31 எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

சேலம் ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வருகின்ற 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆட்சித் தலைவர் அலுவலகம் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் எரிவாயு பதிவு, விநியோகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை நுகர்வோர் கூட்டத்தில் தெரியப்படுத்தி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

News January 28, 2025

ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்ற பாரா வீராங்கனை!

image

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கம் சார்பில் இந்திய பாரா ஒலிம்பிக் குழு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய 20வது மாநில சீனியர் பாரா தடகளம் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் ரஷ்ய, பெண்கள் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம், பெண்கள் குண்டு எறிதல் பிரிவில் இரண்டாமிடம் வென்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவியை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

News January 28, 2025

இடஒதுக்கீடு நோக்கம் நிறைவேறவில்லை – அன்புமணி 

image

சேலத்தில் பாட்டாளி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பா.ம.க. தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசுகையில்,”தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுகின்றனர்; அவர்களின் இடஒதுக்கீடு நோக்கம் நிறைவேறவில்லை; வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். மேட்டூர் அணை உபரிநீரை வசிஷ்ட நதியுடன் இணைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்” என தெரிவித்தார். 

News January 28, 2025

வீரபாண்டியார் இருந்திருந்தால் வன்னியருக்கு 10.5%

image

சேலம் சூரமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கண்டிப்பாக கிடைத்திருக்கும் என்றும் அவர் இருந்திருந்தால் திமுக தலைமையிடம் சண்டையிட்டாவது பெற்று தந்திருப்பார் என்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு புகழாரம் சூட்டினார்.

News January 28, 2025

மீனவர்கள் கைது: இபிஎஸ் வலியுறுத்தல்

image

“வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

News January 28, 2025

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை 

image

சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் வெள்ளி தொழிலாளி பால்ராஜ். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இவர்கள் தனியார் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளித் தொழில் நலிவடைந்து வங்கிக் கடனை முறையாக திரும்ப செலுத்தவில்லை என்பதால், வங்கியாளர்கள் தொடர்ந்து பணம் கட்ட கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பால்ராஜ் குடும்பத்துடன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!