India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி பயிற்றுநர் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தலைமையாசிரியர், குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம் 636008 முகவரியில் நவ.20 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, சேலம் வழியாகச் செல்லும் கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவ.22, 29ல் மௌலா அலியில் இருந்து கொல்லத்திற்கும், நவ.24, டிச.01ல் கொல்லத்தில் இருந்து மௌலா அலிக்கும், நவ.18, 25ல் மச்சிலிப்பட்டணத்தில் இருந்து கொல்லத்திற்கும், நவ.20, 27ல் கொல்லத்தில் இருந்து மச்சிலிப்பட்டணத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில், மகளிர் சுய உதவிக்கு உதவிக்குழுக்களுக்கு வர வேண்டிய கடன் தொகை வழங்காமல், போலியாக போலியாக தயாரித்து ரூபாய் 2.45 கோடி கையாடல் செய்த, பந்தன் வங்கியின் கிளை மேலாளர் மனோஜ்குமார், காசாளர் மல்லிகமணி உட்பட எட்டு பேர் மீது மத்திய குற்றப் குற்றப்புலனாய்வு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக கச்சிகுடா- கோட்டயம் இடையே சிறப்பு ரயில் (07131/07132) இயக்கப்படவுள்ளது. நவ.17, 24 ஆகிய தேதிகளில் கச்சிக்குடாவில் இருந்தும், மறுமார்க்கத்தில் நவ.18, 25 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படுகிறது. சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழரின் கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோருக்கு திருவள்ளுவர் திருநாளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்பவர்களுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நவ.19ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் நவ.18ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடக்க உள்ளன. விருப்பமுள்ளவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அஸ்தம்பட்டி, தும்பிப்பாடி, ஆத்தூர், நத்தக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் சேலம், வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, கொங்கணாபுரம், மேச்சேரி, ஓமலூர், எடப்பாடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 15,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 17 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. குறைந்த வாடகையில் செயல்படும் இதில் தற்போது, சிறப்பு சலுகையாக 2 வாரம் வரை வாடகையின்றி விளைபொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் சேலம், வாழப்பாடி,ஆத்தூர், கெங்கவல்லி,தம்மம்பட்டி, கருமந்துறை, கொங்கணாபுரம்,மேச்சேரி, ஓமலூர்,எடப்பாடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில்15,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட17 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. மிகக்குறைந்த வாடகையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.சிறப்பு சலுகையாக 2வாரம் வரை வாடகையின்றி விளைபொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம்
வானமே எல்லை திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 28 குழந்தைகள் சென்னையில் இருந்து சேலத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் விருந்தா தேவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு சாக்லேட் எழுதுபொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்வில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.