Salem

News January 30, 2026

சேலத்தை அலற வைத்த சம்பவம்

image

சேலம் சூரமங்கலத்தில் உள்ள சேலத்தாம்பட்டியில் வெள்ளிக்கடை நடத்தி வரும் சுமதி என்பவர் கடையில் தனியாக இருந்தபோது, ஹெல்மெட் அணிந்த நபர் பொருள் வாங்குவது போல் நடித்து அவர் மீது மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயன்றார். சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் மர்ம நபர் தப்பியோடினார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

BREAKING: ஆத்தூரில் தாய், மகள் தற்கொலை

image

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (57). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 12 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். லட்சுமிக்கு 6 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் 5 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், 3-வது மகள் தீபவேணிக்கு திருமணம் ஆகாதது மற்றும் கடன் தொல்லை அதிகரித்தது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

News January 30, 2026

POWER CUT: சேலம் மாவட்டத்தில் இங்கெல்லாம் மின்தடை

image

சேலம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, இடைப்பாடி, ஆவணியூர், முப்பனூர், சவுரிபாளையம், தாதாபுரம், ஜலகண்டபுரம், நந்தவனம், ஆடையூர், ராமகவுண்டனூர், விராலிகாடு, பூசாரியூர், செலவடை, மின்னாம்பள்ளி, காட்டூர், வலசையூர், தாதனூர், பூசாரிப்பட்டி, செல்லியம்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், வீரகவுண்டனூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகள் ஆகும்.

News January 30, 2026

சேலம் GH-ல் லஞ்சத் தொல்லை? பரபரப்பு புகார்

image

சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கிரிஸ்டல் நிறுவனத்தினர், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். லஞ்சத் தொல்லை மற்றும் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

News January 30, 2026

சேலம் GH-ல் லஞ்சத் தொல்லை? பரபரப்பு புகார்

image

சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கிரிஸ்டல் நிறுவனத்தினர், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். லஞ்சத் தொல்லை மற்றும் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

News January 30, 2026

சேலம் GH-ல் லஞ்சத் தொல்லை? பரபரப்பு புகார்

image

சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கிரிஸ்டல் நிறுவனத்தினர், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். லஞ்சத் தொல்லை மற்றும் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

News January 30, 2026

சேலம் GH-ல் லஞ்சத் தொல்லை? பரபரப்பு புகார்

image

சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கிரிஸ்டல் நிறுவனத்தினர், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். லஞ்சத் தொல்லை மற்றும் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

News January 30, 2026

சேலம் GH-ல் லஞ்சத் தொல்லை? பரபரப்பு புகார்

image

சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கிரிஸ்டல் நிறுவனத்தினர், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். லஞ்சத் தொல்லை மற்றும் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

News January 30, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.29) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 29, 2026

சைபர் மோசடிகளை தவிர்க்க இது அவசியம்!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் மோசடிகளை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி கணக்கு, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஆன்லைன் கணக்குகளில் வலுவான மற்றும் யூகிக்க முடியாத கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றம் ஏற்பட்டால் www.cybercrime.gov.in இணையதளம் அல்லது 1930 உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!