Salem

News November 26, 2024

முதல்வரை கண்டித்து போராட்டம்

image

சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சியினர் 100-க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாமக நிறுவனர் ராமதாஸை, முதல்வர் ஸ்டாலின் கூறி கருத்து தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

News November 26, 2024

நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

சேலம் அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின்ரோடு, ஸ்டேட் பாங்க் எதிரில், தெற்கு மின் கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (நவ.27) நடக்கிறது. வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் காலை 11 மணிக்கு கூட்டம் நடக்கிறது. எனவே, கோட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர் கலந்து கொண்டு மின் தொடர்பான குறைகள், கோரிக்கையை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

குழந்தைகளுடன் கர்ப்பிணி தற்கொலை

image

சேலம், இடையப்பட்டி ஊராட்சி நெய்யமலை அக்கரைப்பட்டி கிராமத்தில் குடும்பத் தகராறில் மணமடைந்த விவசாயி ரவியின் மனைவி மாதம்மாள்(30). தனது இரு பெண் குழந்தைகள் மனோரஞ்சனி, நித்தீஸ்வரி ஆகியோருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை மூவரது உடலையும் கைப்பற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 26, 2024

சேலத்தில் இன்றைய (26.11.24) நிகழ்வுகள்

image

➤காலை 9 மணி  தமிழ்நாடு வருவாய்த்துறையினர் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. ➤சேலம் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. ➤காலை 11 மணி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் சிபிஎம் ஆபீசில் நடக்கிறது. ➤காலை 11 மணி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

News November 26, 2024

புத்தக கண்காட்சி விரைவில் ஆரம்பம்

image

சேலத்தில் புத்தக கண்காட்சி வரும் 29ஆம் தேதி துவங்கி வரும் டிச.9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 100 பதிப்பங்கள் 2 லட்சத்திற்கு மேல் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. புத்தக பிரியர்களே ஷேர் பண்ணுங்க.

News November 26, 2024

4ம் வகுப்பு மாணவி சாதனை: ஆட்சியர் பாராட்டு

image

சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 4ம் வகுப்பு பயின்று வரும் மாணவி கிருத்திகா. இவர் 100 திருக்குறளை பார்க்காமல் எழுதி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்காக இன்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் மாணவி கிருத்திகாவின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

News November 26, 2024

சிறப்பு முகாம் வாயிலாக 84,000 விண்ணப்பம்

image

கடந்த இரண்டு வாரங்களில், சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாட்கள் நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் வாயிலாக, சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டமன்றத் தொகுதிகளில் 84 ஆயிரத்து 620 விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்தும் அடங்குமென மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 26, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழ்நாடு சிறுபான்மை இன பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும், தொழில் கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் திட்டங்களைப் பெற விரும்புவோர், தங்களது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து கீழ் இருப்பின், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மை நல துறை அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி இன்று அறிவுறுத்தியுள்ளார்.

News November 25, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருகின்ற 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. நவம்பர் 24-க்கான மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215ல் நடைபெறும். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, வேளாண்மை சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News November 25, 2024

சிறிய ஜவுளி பூங்கா அமைக்க ஆலோசனை கூட்டம்

image

சேலம் மாவட்டத்தில் சிறிய ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக, ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணி நூல் துறையின் மண்டல இணை இயக்குனர், முன்னோடி வங்கி மேலாளர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!