India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாய உரப்பொருளுக்கு விலை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்தனர். போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட 9-வது வார்டு வர்மா சிட்டி அருகில் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாகவும், பள்ளி மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையிலும் தமிழக அரசின் சிறப்பு நிதியில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 70- க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த புகைப்படங்கள், மாடல்கள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கப்படுகிறது
நாம் தமிழர் கட்சியிலிருந்து சேலம் மாநகர மாவட்ட செயலாளர் தங்கதுரை, வீரத்தமிழர் முன்னணியின் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், மேட்டூர் நகர து.தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் விலகிய நிலையில் தற்போது அக்கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட ஓமலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பால்ராஜ் அசோகன் (ம) 30 உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை, சூரமங்கலம், ஆத்தூர், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட 13 உழவர் சந்தைகளில் கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியையொட்டி நேற்று (டிச.15) ஒரே நாளில் மட்டும் 302 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.1.36 கோடிக்கு விற்பனையானதாக வேளாண் மற்றும் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் இன்றைய(16.12.24) நிகழ்வுகள். ➤ காலை 6 மணி முதல் அனைத்து இந்து ஆலயங்களிலும் மார்கழி மாத திருவெம்பாவை விழா நடைபெறவுள்ளது. ➤ காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைத்தீர் கூட்டம். ➤ காலை 9:30 மணி ஏ வி ஆர் திருமண மண்டபத்தில் இன்னிசை திருவிழா. ➤ காலை 10 மணி வாழப்பாடியில் வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமித்ததை கண்டித்து கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில், காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான (டிசம்பர் 15) அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
➤ சேலத்தில் கைதிக்கு கஞ்சா கொடுத்த வக்கீல் ➤ 2 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது ➤ சேலம் வழியாக குண்டூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு ➤ ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மேலும் 62 கண்காணிப்பு கேமரா ➤ முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் தடை ➤ மகளிர் விடியல் பயண பேருந்து: அமைச்சர் துவக்கி வைப்பு ➤ அம்மாபேட்டை பகுதியில் மரக்கன்றுகள் நடவு ➤ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நிறைவு
சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மகளிர் விடியல் பயண பேருந்துகளை இன்று (டிச.15) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ், பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொங்கலை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் கடைகளில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் செங்கரும்பு வழங்குகிறது. அதன் உற்பத்திக்கு தண்ணீர் அதிகம் தேவை என்பதால் காவிரி கரையோரப் பகுதிகளில் மட்டுமே செங்கரும்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் காவிரி கரையோரம் உள்ள கோல்நாயக்கன்பட்டி, நவப்பட்டி ஊராட்சிகளில் 100 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.