India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆக.27- ஆம் தேதி முதல் செப்.02- ஆம் தேதி வரை சேலம் வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671) கோவை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள், புதியதாகப் பதிவு செய்யும் தொழிற்சாலைகள் https://dish.tn.gov.in என்ற மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் வரும் ஆக.30ஆம் தேதிக்குள் தொழிற்சாலைகளின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொழிற்சாலைகள் முறையாகப் பதிவு செய்து பயன்பெறலாம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.23) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், சேலத்தில் பிரசித்தி பெற்ற அழகிரிநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு, திருமண தோஷம் உள்ளவர்கள் ஆண்டாள் திருக்கல்யாணத்தை கண்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் வேண்டி பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை பிரார்த்தனை செய்கின்றனர். இத்தல இறைவனை வேண்டிக்கொள்ள நரம்புத்தளர்ச்சி நோய்கள் நீங்குமாம். SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

சேலம் மாவட்டம், காமலாபுரம் சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.23) இயக்கப்படவிருந்த அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை சேலம் விமான நிலையம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சேலம்: ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த தர்மன் (35). இவருடைய வீட்டில் வளர்த்து வந்த நாய் இவரை கடித்துள்ளது. இதனை அடுத்து முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று இன்று உயிரிழந்தார். ரேபீஸ் நோய் தாக்கியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் கடந்த சில நாள்களுக்கு முன் ரேபீஸ் நோய் தாக்கி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சரவணன் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கோயில் கட்டி இருக்கிறார். வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த கோயிலின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வருகிற 27.08.2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அதே நாளில் படப்பிடிப்பு தளம், ஒரு ஸ்டுடியோவையும் தொடங்கவுள்ளர். இதனை இயக்குநர் பாண்டிராஜ் ஆக. 27-ம் தேதி இதை திறந்து வைக்கிறார்.

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற ஆகஸ்ட் 27- ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,823 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் மாநகர் பகுதிகளில் மட்டும் 865 இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் நாளைய (ஆக.24) சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் நாளை கோவை செல்லாமல் போத்தனூரில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.