Salem

News December 30, 2024

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

வேளாண் பொறியியல் துறையின் மூலம் இ-வாடகை, தரிசு நில உழவு மானியம் மற்றும் மின்மோட்டார் பம்புகள் மானியத்தில் பெற, வேளாண்மைப் பொறியியல் துறையின், சேலம் மாவட்ட வேளாண்மை பொறியியல் செயற் பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள வேளாண்மை பொறியியல் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களை தொடர்புகொண்டு, பயன்பெறலாம் என, சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

புத்தாண்டை அமைதியாக கொண்டாட வேண்டும் 

image

சேலம் மாநகர காவல் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில், புத்தாண்டை அமைதியாகவும், விபத்து இல்லாமல் கொண்டாட வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே புத்தாண்டை கொண்டாட வேண்டும், நீச்சல் குளங்களில், நீர் முற்றிலும் அகற்றப்பட்டு இருக்க வேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

சேலத்தில் வாகனங்கள் பொது ஏலம்!

image

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட, 3 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 74 இரு சக்கர வாகனங்கள் என  மொத்தம் 80 வாகனங்கள், வரும் ஜன.3ம் தேதி ஏலம் விடப்படுகின்றன. சேலம் லைன்மேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நாளை (டிச.31) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணத்தை ஜன.3ம் தேதி காலை 10 மணிக்குள் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

News December 30, 2024

சேலம்: பெண் தீக்குளிக்க முயற்சி

image

சேலம் வீரக்கல் பகுதியை சேர்ந்த மாலதி என்னும் பெண் தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை கண்ட காவலர்கள், பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது, “தனது தெருவில் நடக்கும் சமூக விரோத செயலை தனது கணவர் தட்டிக் கேட்டதாகவும், இதனால் அவர் மீது பொய் வழக்கு போட்டு தங்களை காவல்துறை தொந்தரவு செய்வதாகவும்” தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் மனு பெற்ற ஆட்சியர்

image

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர் கூட்டத்தில் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர். அதன்படி மாற்றுத்திறனாளிகள், கலெக்டரிடம் மனு அளிக்க கூடியிருந்த இடத்திற்கு நேரடியாக சென்று மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அந்தக் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.

News December 30, 2024

சேலத்தில் மதுபானங்கள் குவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி ரூபாய் 3 கோடி முதல் ரூபாய் 4 கோடி அளவில் மதுபானங்கள் விற்பனையாகிறது. இந்த நிலையில் வரும் புதன்கிழமை புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30% மதுபானங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

News December 30, 2024

பொங்கல் பரிசுத்தொகுப்பு- ஜன.09 முதல் டோக்கன்!

image

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் 1,715 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10.71 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் வீடுதோறும் வரும் ஜன.09 முதல் தொடங்குகிறது. இதற்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை ஆகியவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி விரைவில் தொடங்குகிறது.

News December 30, 2024

சேலத்தில் இன்றைய நிகழ்வுகள்

image

சேலம் (டிச.30) இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்: 1) காலை 6:00 மணி அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி பூஜைகள். 2) காலை 10 மணி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைகள் கூட்டம். 3) காலை 10 மணி கோட்டை மைதானத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம். 4) காலை 11 மணி கோட்டை மைதானத்தில் விடுதலை முன்னணி தோழமை சங்கங்கள் ஆர்ப்பாட்டம். 5)12 மணி தமிழ் மாநில விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News December 30, 2024

இறப்பிலும் இணைபிரியாத கணவன், மனைவி

image

சேலம், வீரபாண்டி முன்சீப் தோட்டம் பகுதியில் வசிக்கும் பெரியசாமி‌. இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இவருக்கு ஜெகதாம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஜெகதாம்பாள் வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த கணவர் பெரியசாமி இறந்த மனைவியை பார்த்து கொண்டு இருந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார்.

News December 30, 2024

சேலம்: இன்றைய இரவு அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (29-ம் தேதி) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!