India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, டிச.23,30 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சிவேலிக்கும், டிச.24,31 தேதிகளில் கொச்சிவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06043/06044) இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும். முன்பதிவு நாளை (டிச.22) காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது.
சேலம் வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரவில் குற்றச் செயல்களை தடுத்திடும் வகையில், தினந்தோறும் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் இன்று (டிசம்பர் 21) ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் வரும் டிச.24- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, காலை 11.00 மணிக்கு மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் தலைமையில், மாமன்ற இயல்புக் கூட்டம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, சேலம்- சென்னை, சென்னை- சேலம் ஆகிய வழித்தடத்தில் விமான சேவை கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. வழக்கமாக, சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் பயணிக்க ரூபாய் 3,537 கட்டணமாக இருந்த நிலையில், தற்போது ரூபாய் 7,422 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூர் ரயில்வே யார்டில் பராமரிப்பு காரணமாக, கோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிச.23, 24, 25, 27, 28, 31, ஜன.1, 4, 5, 6 ஆகிய தேதிகளில் காலை 07.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்தும், பெங்களூரு கண்டோன்மெண்ட் – கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டிச.23,24,25,27,28,31, ஜன.1,4,5,6 ஆகிய தேதிகளில் மதியம் 02.20 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு பேருந்துகள் வரும் டிசம்பர் 25 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து சென்னை, பெங்களூரு, கோவை, ஓசூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இணையதளம் வழியாக முன்பதிவுச் செய்து பயணிக்கலாம்.
சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வரும் டிச. 26 மற்றும் 27ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் பொது ஏலம் விடப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு அமல் பிரிவில் ஓமலூர், மேட்டூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 11 நான்கு சக்கர வாகனங்கள், 135 இருசக்கர வாகனங்கள் என 146 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதியில் திடீரென மழை பெய்தது. நேற்று இப்பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென ஆத்தூர், வாழப்பாடி, கொத்தாம்பாடி, கல்பகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், பொதுமக்கள் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். உங்க ஏரியாவில் மழை பெய்தால் ஷேர் பண்ணுங்க.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றசெயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான (20ம் தேதி) அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 20) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.