Salem

News March 10, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (03680) நாளை (மார்ச் 11) காலை 07.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக 08.25 மணி நேரம் தாமதமாக நாளை மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 10, 2025

சேலத்தில் பீர் விற்பனை 40% அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் 100 பாரன்ஹீட் வெப்பம் வெயில் சுட்டெரித்து வருகிறது கடந்த சில நாட்களாக விஸ்கி பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது டாஸ்மார்க் விற்பனையாளர் கூறுகையில் 200 டாஸ்மார்க் கடைகள் நாள் ஒன்றுக்கு மூன்று கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது தற்போது வெயிலின் தாக்கத்தால் உயிர் விற்பனை 40 சதவீதம் கூடியுள்ளது என தெரிவித்தார்

News March 10, 2025

கோடைக்கால அட்டவணையை வெளியிட்ட சேலம் விமான நிலையம்

image

சேலம் காமலாபுரத்தில் இருந்து சென்னை, கொச்சின், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், கோடைக்கால பயண நேர அட்டவணையை சேலம் விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 30 முதல் கோடைக்கால அட்டவணை அமலுக்கு வருகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றனர்.

News March 10, 2025

சேலம் வந்த பிரபல இயக்குனர் 

image

சேலம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (மார்ச்.10) பா.ம.க. பிரமுகர் தமிழ்செல்வன்- சந்திரலேகா ஜோடி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பா.ம.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

News March 10, 2025

சேலம் ஆட்சியர் அறிவிப்பு 

image

“அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்கள் வருமானத்தை தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெற வேண்டும். மாநில அளவில் சேலம் மாவட்டம் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ.9,101.99 கோடி வசூலித்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2025

கோடை வெயிலின் தாக்கம் பீர் விற்பனை இருமடங்காக உயர்வு

image

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ரூ.5 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, ரம், விஸ்கி போன்ற மதுபானங்கள் விற்பனை சரிந்து பீர் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. மேலும், சில கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மதுபிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

News March 10, 2025

மார்ச் 21- ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்!

image

சேலம் மேற்கு கோட்ட அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம், வரும் மார்ச் 21- ஆம் தேதி மதியம் 03.00 மணிக்கு நடக்க உள்ளது. புகார்களை ‘அஞ்சல் கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம்-636005’ எனும் முகவரிக்கு வரும் மார்ச் 18- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால் போன்ற சேவை தொடர்பான் புகார்களையும் கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பலாம்.

News March 10, 2025

சேலம்: அரசு தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலை

image

தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.8500 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். கடைசி நாள் 11.3.25 ஆகும். விண்ணப்பிக்க <>இங்கே<<>> க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 10, 2025

மாநகராட்சி ஆணையர் நியமனம்: அன்புமணி வலியுறுத்தல்

image

சேலம் மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர் பணியிடங்களும் ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும், அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆணையாளர்களாக நியமிக்க வேண்டும் என பா.ம.க. மாநில தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 10, 2025

டயர் வெடித்து ஒரே குடும்பத்தில் 25 பேர் படுகாயம்

image

சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருமணத்திற்காக திருக்கடையூர் சென்று இன்று இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு வரும்போது, பஸ்ஸின் டயர் வெடித்ததில் 25 பேர் படுகாயம் அடைந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் ஆறுதல் கூறினார். மேலும், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!