Salem

News January 9, 2025

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு

image

பொங்கல் பண்டிகை எதிரொலியாக சேலத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு பயண கட்டணம் ரூபாய் 1,000 ஆகவும், நெல்லைக்கு ரூபாய் 5,000 ஆகவும் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி; வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை.

News January 9, 2025

சேலம் ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

image

மதுரை கூடல் நகர் ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16321), கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (16322) இன்றும் (ஜன.09), ஜன.11 தேதிகளில் விருதுநகர்- கரூர் ரயில் பாதையில் இயக்கப்படுவதால் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News January 9, 2025

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென உயர்வு

image

பொங்கல் பண்டிகை எதிரொலியாக சேலத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு பயண கட்டணம் ரூபாய் 1,000 ஆகவும், நெல்லைக்கு ரூபாய் 5,000 ஆகவும் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி; வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை.

News January 9, 2025

சேலம்: உயிரிழந்த பெண்ணுக்கு நிவாரணம் அறிவிப்பு

image

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தை CM ஸ்டாலின் அறிவித்தார். திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் நேற்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

News January 9, 2025

பொங்கல் பரிசுத்தொகுப்பு- தொலைபேசி எண்கள் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வரும் பணி குறித்த கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0427-2415784, 0427-2451943, 73387-21707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

திருப்பதியில் பலியான சேலம் பெண் இவர் தான்

image

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் மல்லிகா என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அப்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் இறந்தனர். இவர் 16வது வார்டு தாசனுரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி மல்லிகா(50) என தெரியவந்தது. 

News January 9, 2025

சேலத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு

image

சேலம் மாவட்டத்தில் 1,735 ரேஷன் கடைகள் மூலம் முழு கரும்புடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு 10.78 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு இன்று (ஜன.09) முதல் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தும் வகையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

News January 9, 2025

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶ காலை 8 மணி பள்ளப்பட்டி முருகன் கோயிலில் இருந்து பழனிக்கு 500 பக்தர்கள் பாயாத்திரை ▶9மணி ஸ்ரீரங்கப் பாளையம் ரேஷன் கடையில் ஆட்சியர் டோக்கன் வழங்கல் குறித்து ஆய்வு. ▶ 11 மணி குள்ளம்பட்டி பகுதியில் ஆட்சியர் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் ▶லை 4 மணி சிபிஎஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ▶அனைத்து பெருமாமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் பணி தீவிரம் 

News January 9, 2025

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது 

image

திருநங்கையர் தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர். சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில், ஏப்ரல் 15 அன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News January 8, 2025

மாநகர காவல் இரவு பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ரோந்து செல்லும் காவலர்கள் விபரங்கள் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!