India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், குழுத்தலைவர் மற்றும் சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி முன்னிலையில் இன்று (ஆக-29) நடைபெற்றது. உடன் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட், ஜூனியர் மேனேஜர் மற்றும் ஆபிசர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.இதற்கு 10th, 12th, Any Degree மற்றும் M.Sc, B.Tech முடித்தவர்கள் <

தபால்துறை சார்பில் தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டிக்கு பள்ளி மாணவர்கள் கலந்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். https://tamilnadupost.cept.gov.in/ இணையத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து வரும் செப்.01-ம் தேதிக்குள் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மேற்கு மண்டலம், கோவை- 641030 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் மாவட்ட சிறை, வங்கதேசத்தினர் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது இம்முகாமில் 52 ஆண்கள், 20 பெண்கள், 8 குழந்தைகள் என மொத்தம் 81 வங்கதேசத்தினர் தங்க வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மின்சாரம், தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி 30- க்கும் மேற்பட்ட அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இவ்வங்கிகள் மூலம் வேளாண்மை திட்டங்கள் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகள் என ரூ.5,461.61 கோடி கடனுதவிகளும், சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4,574.25 கோடி கடனுதவிகளும்,மாணவ, மாணவிகளுக்கு ரூ.20.74 கோடி கல்விக்கடன்களும் என மொத்தம் ரூ.10,477.98 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொடர் பண்டிகைகளை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் (06085), பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06086) வரும் நவம்பர் மாத இறுதி வரை தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை வீடு தேடி அரசு முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அம்மாபேட்டை மண்டலம் நேரு கலை அரங்கம் பழைய பேருந்து நிலையம
▶️புள்ளகவுண்டம்பட்டி அக்ரஹாரம் வி.பி.ஆர்.சி.எண் கட்டிடம் வினோபாஜி நகர்
▶️ தாரமங்கலம் தாரமங்கலம் சமுதாயக்கூடம் ▶️வீரகனூர் சிவன் கோவில் அருகில் சமுதாயக்கூடம் ▶️காடையாம்பட்டி மீனாட்சி திருமண மண்டபம் மரக்கவுண்டன் புதூர் ▶️கொளத்தூர் விபிஆர்சி கட்டிடம் சத்யா நகர்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் சரகத்தில் நடந்த வாகன தணிக்கையில் முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி இயக்கிய 29 ஆம்னி பேருந்துகளுக்கு ரூபாய் 42,000 அபராதமும், வரியாக ரூபாய் 78,000-மும் வசூலிக்கப்பட்டது. பர்மிட் இல்லாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்ஜினியர் அல்லது டிகிரி முடித்த இளைஞர்களுக்கு ‘தாட்கோ’ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக ‘ட்ரோன்’ தயாரிப்பு, ‘எம்பேடட்’ சென்சார் சோதனை பயிற்சி, பிரின்டட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படவுள்ளது.இதில் கலந்து கொள்ள www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவிப்பு!(SHARE)
Sorry, no posts matched your criteria.