India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு- நான்டேட் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் மார்ச் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை டிசம்பர் வரை அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில், மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்டேட்- ஈரோடு சிறப்பு வார ரயில் வெள்ளிக்கிழமை தோறும், ஈரோடு-நான்டேட் சிறப்பு வார ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜன.05ஆம் தேதி காலை 6 மணிக்கு “பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம்” நடைபெறும் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5,000, 2-ம் பரிசாக ரூ.3,000, 3ம் பரிசாக ரூ.2,000 மற்றும் நான்கு முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டில் மது போதையில், வாகனம் ஓட்டினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாக இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். பொது இடங்களில் ஒலிபெருக்கிகளை வைத்து, மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. மீறி செயல்படுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, சேலம்- சென்னை இடையே இருமார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வரும், இண்டிகோ நிறுவனம், விமான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு சாதாரண நாட்களில் ரூபாய் 3,000 ஆக கட்டணம் உள்ள நிலையில், டிச.31-ல் பயணிக்க ரூ.5,126 ஆகவும். ஜன.01- ல் ரூ.6,491 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலம் பயணிப்பதற்கு ரூ.5,800 ஆக கட்டணம் உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று (டிச.30) நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமணநிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட 265 கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டன.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள், நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
வேளாண் பொறியியல் துறையின் மூலம் இ-வாடகை, தரிசு நில உழவு மானியம் மற்றும் மின்மோட்டார் பம்புகள் மானியத்தில் பெற, வேளாண்மைப் பொறியியல் துறையின், சேலம் மாவட்ட வேளாண்மை பொறியியல் செயற் பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள வேளாண்மை பொறியியல் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களை தொடர்புகொண்டு, பயன்பெறலாம் என, சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர காவல் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில், புத்தாண்டை அமைதியாகவும், விபத்து இல்லாமல் கொண்டாட வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே புத்தாண்டை கொண்டாட வேண்டும், நீச்சல் குளங்களில், நீர் முற்றிலும் அகற்றப்பட்டு இருக்க வேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட, 3 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 74 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 80 வாகனங்கள், வரும் ஜன.3ம் தேதி ஏலம் விடப்படுகின்றன. சேலம் லைன்மேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நாளை (டிச.31) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணத்தை ஜன.3ம் தேதி காலை 10 மணிக்குள் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.