Salem

News March 1, 2026

சேலம்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0427-2450023 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News March 1, 2026

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

News March 1, 2026

சேலம் அருகே பேருந்து மோதி ஒருவர் பலி

image

சேலம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த சௌந்தரராஜன் (27), இன்று அயோத்தியாபட்டணம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுக்கம்பட்டி மயானம் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 1, 2026

சேலம்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News March 1, 2026

சேலம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

சேலம் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 1, 2026

ஆத்தூரில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!

image

பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சந்துரு-வைஷ்ணவி மற்றும் கடம்பூர் சங்கவி-ராஜா ஆகிய இரு காதல் ஜோடிகளும், பெற்றோரின் எதிர்ப்பால் கோவில்களில் திருமணம் செய்துகொண்டு நேற்று ஆத்தூர் காவல் நிலையங்களில் பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இருதரப்பு பெற்றோர்களையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தனர்.

News March 1, 2026

சேலம் பழைய பேருந்துநிலையம் அருகே பயங்கர விபத்து!

image

சேலம் வீராணம் பள்ளிபட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், வலசையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாநகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2026

வாலிபர் மீது போக்ஸோ வழக்கு பதிவு

image

தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த மணி (24). இவரும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்தனர். இதுகுறித்து மாணவியை பெற்றோர் கண்டித்த நிலையில், மணி அந்த சிறுமியை அழைத்து சென்று நேற்று இரவு தனது பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனை தொடர்ந்து, இன்று காலை மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மணி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 28, 2026

சேலம்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிப்.28 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.

error: Content is protected !!