India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆத்தூர் ஒன்றியம் செல்லியம்பாளையத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பத்திரம் மனோகரன் தரப்பில் வைக்கப்பட்ட இப்பேனர் சிதைக்கப்பட்டதைக் கண்டித்து, திமுக நிர்வாகிகள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சேலம் மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

சேலம் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் மெடிக்கல் குமார், ஜே.ஜே. நகர் வேலுசாமியிடம் ₹3 லட்சம் கடன் பெற்று வழங்கிய காசோலை போதிய பணமின்றி திரும்பியது. இதுகுறித்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் மெடிக்கல் குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது.

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

சேலம் மாவட்ட அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹11,598 கோடி வசூலாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் சிறப்பாகப் பணியாற்றிய முகவர்களின் முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் எனச் சேலம் கிழக்கு அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார். இமாலய இலக்கை எட்ட உறுதுணையாக இருந்த முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில், கழுத்து மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஒருவரை நகர போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர் மணக்காட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கர் (52) என்பது தெரியவந்தது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதற்காக இந்தக் கொலை முயற்சி நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சேலம் 4 ரோடு சாமுண்டி வளாகத்தில் நாளை மார்ச் 04 முதல் 13 வரை தங்க நகை மதிப்பீட் டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் தங்கம் விலை கணக்கிடுதல், கடன் தொகை வழங்கும் முறை, ‘ஹால்மார்க்’ தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.பயிற்சி முடித் தவர்கள் கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் பணியில் சேரலாம்.விவரங்களுக்கு: 94437 28438

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்கப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் OTP உள்ளிட்ட ரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும், சந்தேகமான அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை மோசடி ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.