India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலத்தில் இன்று (செப்.2) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்: ▶️சூரமங்கலம் மண்டலம் – கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபம் சிவதாபுரம் ▶️கருக்கல்வாடி – கேகேஎம் திருமண மண்டபம் கிருஷ்ணம் புதூர்
▶️ சங்ககிரி – சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை
▶️ நங்கவள்ளி – எம்என்வி திருமண மண்டபம் நங்கவள்ளி ▶️வீரபாண்டி – ஏவிஎம் திருமண மண்டபம் வேம்படிதாளம் ▶️தலைவாசல் – சமுதாயக்கூடம் ராமானுஜபுரம்.

சேலம் மக்களே.., தமிழக அரசின் தாட்கோ(TAHDCO) ஆவின் பாலகம் மானியத் திட்டம் மூலம் உங்கள் ஏரியாவில் நீங்களும் பாலகம் அமைக்கலாம்.
▶️இதற்கு அரசு சார்பாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
▶️இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம். இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்த <

சேலம்: மேச்சேரியில் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய பத்திரகாளியம்மனுக்கு இன்றைய அதிகாலை தரிசனமாக சிறப்பு அபிஷேக பூஜைகளும், மஞ்சள் நிற பட்டு உடுத்தி, திரிசூலம் கையில் ஏந்தி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் பூட்டப்பட்டது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

சேலம் மாநகர காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவில் ஒரே நாளில் 10- க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்து மாநகர காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ பாஸ்கர், அழகாபுரத்திற்கும், அழகாபுரத்தில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ மணிகண்டன், பள்ளப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வரும் செப்.03- ல் சேலம் மாவட்டத்தில் மூலப்புதூர் ஆர்.கே.எஸ். திருமண மண்டபம், ஆட்டுக்காரன் வளவு கிருஷ்ணவேணி ராமலிங்க செட்டியார் திருமண மண்டபம், செங்கரடு சமுதாயக்கூடம், குள்ளம்பட்டி சமுதாயக்கூடம், ஆத்தூர், ராணிப்பேட்டை, அண்ணா கலையரங்கம், நாச்சிப்பாளையத்தில் காளியம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.01) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

செப்டம்பர் மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலை பட்டியலை இன்று (செப்.01) எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் 19 கிலோ எடைக் கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து ரூ.1,687 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், 5-வது மாதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.886.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், 2025-26ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் அக்டோபர் மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற உள்ளது. அரசுத் துறை, வாரியம், கழகம் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் இந்தப் பயிலரங்கில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்த்துள்ளார்.

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சேலம் வழியாகச் செல்லும் கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680) நாளை (செப்.02) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 மணி நேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

சேலம் மாநகரில் இன்று ( செப்டம்பர் 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.