India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி – கெங்கவல்லி சாலையில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தம்மம்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பலியான முதியவர் யார்? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலம் 26-வது வார்டுக்குட்பட்ட மத்திய பேருந்து நிலைய வணிக வளாக மேல் தளத்தில் ‘முதல்வர் படைப்பகம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதில் UPSC, TNPSC, SSC, RRB மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான உயர்தரப் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இதனைப் படித்துப் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

வீரகனூர் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தில், சதீஷ்குமார் என்பவரது வீட்டில் 7 பவுன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடு போனது. இதேபோல் பச்சையம்மாள், முருகன் உள்ளிட்ட மொத்தம் 7 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் சரியாகச் செயல்படாததால் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 7588888824 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமும், 7718955555 என்ற எண்ணில் எஸ்.எம்.எஸ் மூலமும் சிலிண்டர் பதிவு செய்யலாம். மேலும், ஷேர் பண்ணுங்க.

சேலம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். மேட்டூர் எம்எல்ஏ-வும், மேற்கு மாவட்ட செயலாளருமான சதாசிவம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இணைந்தனர். இது சேலம் மாவட்டத்தில் உள்ள திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நகர போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் யாசகம் பெற்று வாழ்ந்தவர் என்பது தெரிந்தாலும், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சேலத்தில் பாதுகாப்புப் பணிக்காக ஓய்வு பெற்ற காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள தகுதியான நபர்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் தனிப் பிரிவில் மனு அளிக்கலாம் என ஆணையர் அனில்குமார் கிரி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.