India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச்.11) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

டெல்லியில் இன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரியை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி (ம) சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாட்டிற்கு தேவையான இயற்கை எரிவாயு வழங்கலை உறுதி செய்யவும், தட்டுப்பாடின்றி சிலிண்டர் வழங்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அமைச்சரிடம் வழங்கி விரிவாகக் கோரிக்கை விடுத்தனர்.

சேலம் கல்பகனூரில் திருவிழா விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் அவரது நண்பர்கள் வசூலில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த நிதீஷ் குமார் தரப்பினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, இரு தரப்பையும் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் ஓமலூர் கோட்டக்கவுண்டம்பட்டியில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக் கோரி பாமக எம்.எல்.ஏ அருள் வலியுறுத்தியுள்ளார். வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் கடை மூடப்படாவிட்டால், அன்றைய தினம் காலை 11 மணிக்குத் தாமே நேரில் வந்து கடையைப் பூட்டிப் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

சேலம் மக்களே, HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <

சேலம் கூட்டத்துபட்டியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கஜேந்திரனை ஜெகன் மற்றும் இருவர் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் பாரதி என்பவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர். கஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகரில் இன்று (10.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகரில் இன்று (10.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

தவெக சார்பில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் நடமாட்டம், உள்ளிட்டவற்றை கண்டு கொள்ளாத, தமிழக அரசை கண்டித்து வரும் வியாழக்கிழமை, சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், இதில் தவெகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.