Salem

News March 26, 2025

சேலம்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா? என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 26, 2025

சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

image

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த 913 மாற்றுத் திறனாளிகள் உள்பட 41 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News March 26, 2025

இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

image

சேலம்-7 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 16 மணி நேரம் கொண்ட கார் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகிய கால பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஏற்காடு மெயின் ரோடு, சேலம்- 636007 என்ற முகவரியிலும், 99769 54196, 99651 03597 கைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்-உடனே SHARE பண்ணுங்க.

News March 26, 2025

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறைதீர் கூட்டம்

image

சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள அத்வைத ஆசிரமம் சாலையில் உள்ள விநாயக வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 27) காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும், இரண்டாம் பாகம் கூட்டம் மதியம் 2 மணி முதல் மாலை 5:45 வரை நடைபெறும் என்று அறிவிப்பு.

News March 26, 2025

பெண் கொலை வழக்கு- எலெக்ட்ரீசியனுக்கு 5 ஆண்டு சிறை!

image

சேலம் அடுத்த வீராணம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த அமுதா (36) சாக்கடை கால்வாயில் குப்பைகளைக் கொட்டியுள்ளார். இது தொடர்பான தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் சிவக்குமார் அமுதாவை தாக்கியுள்ளார். இது படுகாயமடைந்த அமுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் எலெக்ட்ரீசியனுக்கு ரூபாய் 2,000 அபராதமும், 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

News March 25, 2025

சேலம் மாநக இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது ரவுடிகள் தொல்லை இருந்தாலும் கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை சார்ந்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 25, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் ஏப்ரல் 01 முதல் நீச்சல் கற்றல் பயிற்சி முகாம் துவங்கவுள்ளது. 12 வேலை நாட்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக மொத்தம் ரூ.1770 ஆகும். கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி கட்டணத்தொகை www.sdat.tn.gov.in வாயிலாகவும், G Pay, Phone Pay மூலமாக மட்டும் செலுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 25, 2025

சேலம் மாவட்டத்தில் 3 அறிவுசார் மையங்கள் அமைகிறது!

image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 25) நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். அதன்படி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக நடப்பாண்டில் வாழப்பாடி, கருப்பூர், ஜலகண்டாபுரம் உள்பட தமிழகத்தில் 20 பேரூராட்சிகளில் ரூ.33 கோடியில் அறிவுசார் மையங்கள் அமைகிறது.

News March 25, 2025

சேலத்திற்கு மெட்ரோ ரயில் வருமா? 

image

சேலத்திற்கு மெட்ரோ ரயில் வருமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோவை, மதுரை, திருச்சியில் மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மெட்ரோ ரயில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சேலத்திலும் மெட்ரோ ரயில் விடுவது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News March 25, 2025

ஜோலார்பேட்டை-ஈரோடு தாமதமாகும் நிர்வாகம் அறிவிப்பு

image

ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ரயில் மார்க்கத்தில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதனால் இந்த மார்க்கத்தின் வழியாக இயங்கும் ஜோலார்பேட்டை ஈரோடு ரயில் 25ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை 45 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் அதாவது ஜோலார்பேட்டையில் பிற்பகல் 2:45 மணிக்கு புறப்பட்டு குறிப்பிட்ட பகுதியில் 45 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!