India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடக்கிறது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் பாகுபலி காளை முதல் பரிசை பெற்றது. சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேல் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றன. எனவே மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோல் சேலத்திலும் வாடிவாசல் அமைத்து நடத்த வேண்டும் என சேலம் பாகுபலி காளையை வளர்த்த மோகன்ராஜ், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த அழகேசன் (40) திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான நிலையில் அம்மாபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். அதேபோல், சேலம் அழகாபுரம் ஸ்வர்ணபுரி பகுதியைச் சேர்ந்த பிலால் (36) ஜாமீனில் வெளியே வந்து 2 மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவின் பேரில் அழகாபுரம் போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
பொங்கல் முடிந்து முக்கிய நகரங்களுக்கு திரும்ப இன்றைய ரயில் பயணத்திற்கான தட்கல் டிக்கெட் புக்கிங் தொடங்கிய 2 நிமிடத்தில் முடிந்தது. பெரும்பாலான பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. சேலம் ரயில்வே கோட்ட கணினி முன்பதிவு மையத்திலும் தட்கல் பதிவுக்கு ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனாலும் பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் இன்று (ஜன.19) மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை அர்ச்சகர்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்று கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பொங்கல் விடுமுறை நிறைவடைந்ததையொட்டி, தென்மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து சேலத்திற்கு ரூபாய் 3,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ரூபாய் 800 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு பக்தர்கள் குளிக்க 7 கிணறுகள் உள்ளன. அங்கு குளிக்கும் பெண்கள் உடை மாற்ற அறை இல்லை. காரில் வரும் பெண்கள், கிணற்றில் குளித்துவிட்டு காரில் சென்று உடை மாற்றுகின்றனர். மற்றவர்கள், உடை மாற்ற சிரமப்படுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரக்கோணம்- சேலம் மெமு ரயிலின் பெட்டிகள் கும்பமேளாவுக்காக உ.பி.க்கு அனுப்பப்பட்டுள்ளதால் நாள்தோறும் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் அரக்கோணம்- சேலம் மெமு ரயில் சேவைகள் (16087/16088) நேற்று முதல் மறுஉத்தரவு வரும் வரை ரத்துச் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சோளிங்கர், வாலாஜா,காட்பாடி, குடியாத்தம்,ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் சென்றது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் ‘பூட்டர் பவுண்டேஷன்’ தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புகார் அளித்த பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், நிர்வாகி கிருஷ்ணவேணி, சட்ட ஆலோசகர் இளங்கோவன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானவர்களிடம் நேற்று (ஜன.18) உதவி கமிஷனர் ரமலீ ராமலட்சுமி விசாரணை மேற்கொண்டார்.
மதினா பள்ளிவாசல் ஈத்கா வழித்தடம் பிரச்சனை சம்பந்தமாக, அதிகாரிகளிடம் பல முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அனைத்து கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளையும் ஓரணியில் திரட்டி தீவட்டிபட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது வருகின்ற ஜன.23 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே சேலம் போலீசார் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சேலம் போலீசார் வெளியிட்டு விழிப்புணர்வு போஸ்டரில்,”சமூக ஊடகங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்,ஆன்லைனில் உலவும் போலிகளை நம்பி உங்களது தனிப்பட்ட அல்லது வங்கி சார்ந்த தகவல்களை பகிர்ந்து மோசடிக்கு ஆளாக வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.