India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் ராணிப்பேட்டை பகுதிகளில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் அண்டை மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் மலை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டை மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். இங்கே<

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் ராணிப்பேட்டை மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் ராணிப்பேட்டை மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டை, முகுந்தராயுபுரம் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (ஜன.3) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், சிப்காட், கல்மேல்குப்பம், வில்வநாதபுரம், எருக்கம்தொட்டி, கன்னிகாபுரம், கல்புதூர், நரசிங்கபுரம், சீக்கராஜபுரம், மற்றும் கிருஷ்ணாவரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஆற்காட்டை அடுத்த கணியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன்(67). இவரது அனைவி ஜீவா. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர், கீழ்விஷாரம் பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, நெடுஞ்சாலையைக் கடந்த போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பூபாலன் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளையொட்டி, நேற்று (ஜன.5) ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி, கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்துப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் கட்சி நிற்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

கலவை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த ராஜேந்தரன் எனபவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் ராஜேந்தரனுக்கு முதலுதவி செய்து தையல் போட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடைபெறுவதாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.