Ramanathapuram

News February 24, 2026

ராம்நாடு: வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்

1.ராமநாதபுரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04567-230444

2.உயர்நீதிமன்ற மதுரை கிளை : 0452-2433756

3.Toll Free 1800 4252 441

4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126

இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 24, 2026

ராம்நாடு: எலக்ட்ரானிக்ல் கடையில் தீ விபத்து.!

image

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை VAO அலுவலகம் எதிரே எலெக்ட்ரானிக்ஸ் பழுது பார்க்கும் கடை உள்ளது. இந்த கடையின் மேல் தளத்தில், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பழுதான எலக்ரானிக்ஸ் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று இப்பகுதியில் குப்பையை எரித்தபோது, அதில் இருந்து சிதறி விழுந்த நெருப்பால், கடையில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News February 24, 2026

ராம்நாடு: கரை ஒதுங்கிய பெண் சடலத்தால் பரபரப்பு.!

image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கரை ஒதுங்கி உள்ளது. இந்நிலையில், இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை மேலும் இவர் எப்படி இறந்தார் என்பது குறித்தும், உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 23, 2026

ராம்நாடு : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

இராமநாதபுரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

ராம்நாடு : சிலிண்டர் புக் பண்ண இனி MISSED CALL…!

image

இராமநாதபுரம் மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 23, 2026

ராம்நாடு : உங்களுக்கு ஓட்டு இருக்கா? தெரிஞ்சுக்க APP..!

image

இராமநாதபுரம் மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா? இ<>ங்கு க்ளிக்<<>> செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து உங்க வாக்களர் எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி நீங்க வாக்களிக்கனும் அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

பாம்பன் மீனவர்கள் 12 பேர் கைது

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 12 பேரை தனுஷ்கோடி தலைமன்னார் இடையே எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ச்சியாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 23, 2026

இராமநாதபுரம்: ரூ.48,480 சம்பளத்தில் BANK வேலை!

image

இராமநாதபுரம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதிற்குட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 23, 2026

பாம்பன் பாலத்தில் விபத்து; 8 பேர் காயம்

image

இராமநாதபுரம் மாவட்டம், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாம்பன் சாலை பாலத்தில் நேற்று(பிப்.22) ஆட்டோ பின்புறம் அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்களை மீட்ட வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 23, 2026

திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் திருக்கோயிலுக்கு பாரம்பரிய உடையை அணிந்து வர வேண்டும். கைலி, அரைக்கால் டவுசர் போன்ற ஆடைகள் கோயிலுக்குள் அணிந்து வர அனுமதி கிடையாது. இது, மாலை போட்டு வருபவர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!