Ramanathapuram

News December 7, 2024

தொண்டி அருகே அரிய வகை ஆமை

image

தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் நேற்று அதிகாலை நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். நீண்ட தூரம் சென்று மீன்பிடித்த போது 15 கிலோ அரிய வகை கடல் ஆமை சிக்கியது. பின் போலீசார் உதவியுடன் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது. இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம் என்றனர்.

News December 6, 2024

ராமநாதபுரம் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

image

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு வைகை ஆற்று நீரை பரளை கால்வாய் வழியாக திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முதுகுளத்தூரை சேர்ந்த சதீஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் பொதுப்பணி துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டர் பரிசீலித்து 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

News December 6, 2024

திருவாடானை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

image

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை குரூப் கரைய கோட்டை கிராமத்தில் இன்று இரைதேடி குடியிருப்புக்குள் சென்ற புள்ளிமான் ஒன்றை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 6, 2024

புகாருக்கு வாட்ஸ-அப் பண்ணுங்க 

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்போர், பதுக்குவோர் பற்றிய தகவல் தெரிந்தால், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04567-230 759, ஹலோ போலீஸ் 83000 31100, மாவட்ட தனிப்பிரிவு 04567-290 113, 94981 01615ல் தகவல் தெரிவிக்கலாம். தடை செய்த குட்கா, புகையிலை பொருட்களை விற்போர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

News December 6, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது

image

ராமேஸ்வரத்தில் இருந்து டிச.4ல் 427 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பிரிட்டோ, நிஜோ படகை இலங்கை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர்.படகில் இருந்த மீனவர்கள் ரிபாக்ஸன் 26, ராஜபிரபு 27 உள்ளிட்ட 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 30 படகுகளின் மீனவர்கள் வலைகளை மூழ்கடித்து விட்டு கரை திரும்பினர்.

News December 6, 2024

250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தனிப்பிரிவு காவலருக்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் மரைக்காயர்பட்டினம் பகுதியில் சக்தி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த 250 கிலோ கடல் அட்டைகளை மண்டபம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் சக்தியிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2024

காட்டுப்பன்றியை வேட்டையாடிவருக்கு ரூ.15,000 அபராதம்

image

பரமக்குடி வனச்சரக அலுவலர்கள் இன்று அதிகாலை ரோந்து பணியின் ஈடுபட்ட போது எதிரே வந்த 2 வீலரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உயிருடன் 2 வயது பெண் காட்டுப்பன்றி இருந்துள்ளது. இதில் சிவகங்கை மணலூர் பொன்படி(48) என்பவர் இறைச்சிக்காக வலை வைத்து பிடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ஹேமலதா ரூ.15,000 அபராதம் விதித்து காட்டுப்பன்றியை கைப்பற்றி வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

News December 4, 2024

108 ஆம்புலன்ஸில் சேர சிறப்பு முகாம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் 108 இல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் டிச.7 அன்று திருவாடானை அரசு மருத்துவமனையில் நடக்கும் முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆலோசகராக பணிபுரிய பி.எஸ்.சி. நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், படிப்பு முடித்திருக்க வேண்டும். 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 044-2888 8060 தொடர்பு கொள்ளவும்.

News December 4, 2024

தொண்டி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் காயம்

image

திருவாடானை தாலுகா பெருமானேந்தல் கிராமத்தில் இன்று(டிச.03) மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கிணறு உரைகளை ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி ஒரு வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த சாலை பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மினி லாரி டிரைவருக்கு காயமடைந்த நிலையில், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

News December 4, 2024

ராமநாதபுரம் விவசாயிக்கு தேசிய விருது

image

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி தரணி ஆர் முருகேசன். விவசாயத்தில் பல்வேறு சாதனைகள் படைத்த millonaire Farmer of India விருதுக்கு ICAR உடன் இணைந்த KJ KRISHI JAGRAN என்ற விவசாயிகள் வளர்ச்சி அமைப்பு சார்பில் தேர்வு செய்யப்பட்டார். டில்லியில் நேற்று நடந்த விழாவில் தரணி முருகேசனுக்கு millonaire Farmer of India விருது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் எஸ்.பி. சிங் பெஹல் வழங்கினார்.

error: Content is protected !!