Ramanathapuram

News December 9, 2024

ராமநாதபுரத்தில் 1164 மோசடி பத்திரங்கள் பதிவு

image

ராமநாதபுரத்தில் 3 ஆண்டுகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 1164 மோசடி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் 20 பேர் பணிபுரிவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டுள்ளது.இதில் 193 புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டுள்ளன.

News December 8, 2024

2.1 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

image

மண்டபம் மரைக்காயர் பட்டிணம் மன்னார் வளைகுடா கடலில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.1 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இத்திட்டம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரையிலும் சுமார் 105.64 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

News December 8, 2024

கைத்தறி நெசவாளர்களுக்கு முகாம் அறிவிப்பு

image

பரமக்குடி கைத்தறி நெசவாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ காப்பீடு அட்டை செயல்படுத்தப்பட்டு வந்தது. திட்டம் கைவிடப்பட்ட நிலையில் நெசவாளர் குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் சிரமம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து நெசவாளர்களையும் இணைக்க டிச.10 முதல் 25 வரை முகாம் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

பள்ளியில் வினாடி வினா போட்டிகள்

image

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வினாடி வினா போட்டிகள் நேற்று நடைபெற்றது. மேத் கியூஸ் ஜீரோ கிரான்ட்’ என்ற பெயரில் நடந்த இப்போட்டிக்கு பள்ளியின் நிறுவனர்கள் ஜி.சுப்பிரமணியம், எம்.பிரேமலெட்சுமி ஆகியோர் லைமை வகித்தனர்.  இதில் தாளாளர் ஹர்ஷவர்த்தன் போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் 15 பள்ளிகள் பங்கேற்றன. செய்யது அம்மாள் பப்ளிக்பள்ளி முதலிடம் பெற்று சுழல் கேடயத்தை வென்றது.

News December 8, 2024

உழவர் பாதுகாப்புத் திட்டத்திற்கு அழைப்பு

image

திருவாடானை தாலுகாவில் உள்ள விவசாயிகள் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் விவசாயிகளாக பதிவு பெற்றவர்களின் மகன், மகள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் அல்லது பட்டயப்படிப்பு படித்தால் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதனை பெற வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் அல்லது சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News December 8, 2024

மண்டபம் மீனவர் 8 பேர் 2 படகுகளுடன் இலங்கையில் கைது

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடல் பகுதியில் இருந்து நேற்று 300 கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழிலுக்கு சென்றன. இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர் 8 பேரை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனால் மண்டபம் மேற்கு வாடி, கோயில் வாடி மீன்பிடி இறங்கு தள மீனவர்களிடம் பரபரப்பு நிலவுகிறது.

News December 7, 2024

குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

image

எமனேஸ்வரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (40). இவர் காந்தி நகர் குளத்தில் இன்று மாலை குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால் உடன் குளிக்கச் சென்றோர் ஷேக் அப்துல்லாவை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சோதனையில் அவர் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது. இது குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 7, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேநீர் விருந்து

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(டிச.07) கொடிநாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் தேநீர் விருந்து நிகழச்சி நடைபெற்றது. முன்னதாக கொடிநாள் தினத்தையொட்டி கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 7, 2024

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி

image

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை எடுப்பது, ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது உள்ளிட்ட ஆதார் குறித்த பணிகளுக்கு வெளியில் சென்றனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் தற்போது அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள தொடக்க நிலை உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.

News December 7, 2024

2 ஆம் கட்ட நிவாரண பொருள்கள் அனுப்பிய கலெக்டர்

image

பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பாதித்தோருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக ரூ.9,30,200 மதிப்பில் அத்தியாவசிய உணவு பொருட்கள் டிச.4 இல் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.8,17,500 மதிப்பில் அரிசி, பருப்பு, மசாலா பொருட்களை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் 2 ஆம் கட்டமாக நேற்று (டிச.6 ) அனுப்பி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!