India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
ராமநாதபுரத்தில் இன்று (12.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் மேற்கு வாடி வடக்கு கடற்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி ராமநாதபுரத்தில் மீனவர் நலத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணனிடம், மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் பாலசுப்ரமணியன், செயலர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் இன்று கோரிக்கை மனு அளித்தனர். அதில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மீனவர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதன் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2025 இல் 6 நாள் தொடர் முறை வருகிறது. ஜன.11 இரண்டாவது சனி, ஜன 12 ஞாயிறு, ஜன 13 ஆருத்ரா தரிசனம் (உள்ளூர் விடுமுறை, இதற்கு ஜன 25ல் ஈடுகட்டும் பணி ), ஜன.14 பொங்கல், ஜன 15 உழவர் திருநாள், ஜன 16 திருவள்ளுவர் தினம் என 6 நாட்கள் விடமுறையாக வருகிறது.
மார்கழி முதல் நாள் டிச.16 முதல் ஜன.13 வரை 29 நாட்கள் ராமேஸ்வரம் கோயிலில் மார்கழி மாதம் பூஜை நடக்கும். அதன்படி கோயில் நடை அதிகாலை 3:30 மணிக்கு திறக்கப்பட்டு 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கும். மார்கழி மாத உற்சவத்தில் சுவாமி புறப்பாடு நாளில் பூஜை நேரங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2025ல் 6 நாள் தொடர் முறை வருகிறது. ஜன.11 இரண்டாவது சனி, ஜன 12 ஞாயிறு, ஜன 13 ஆருத்ரா தரிசனம் (உள்ளூர் விடுமுறை, இதற்கு ஜன 25ல் ஈடுகட்டும் பணி ), ஜன.14 பொங்கல், ஜன 15 உழவர் திருநாள், ஜன 16 திருவள்ளுவர் தினம் என 6 நாட்கள் விடமுறையாக வருகிறது.
தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று(டிச.12) காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு ஐடிஐ.,யில் ஈராண்டு அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் 2024-2025ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை டிச.31 வரை நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 14-40 வயதினர் இப்பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு அலைபேசி எண் 94868 88176-இல் தொடர்பு கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி.மணி நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் தனது டூவீலரில் இன்று ராமநாதபுரம் வந்தார். அச்சுந்தன்வயல் வந்தபோது மதுரையில் இருந்து வந்த அரசு பஸ் டூவீலரின் பின்புறம் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.