India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரத்தில் இன்று (16.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக 3 நாள் அரசு விடுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் அதிபரான முதல் வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும். இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்தியாவின் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இருவரின் சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகரிடம் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார். இருநாட்டு மீனவர்களுக்கு இடையான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கிடவும், சுமுகமான முடிவு எட்டப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
மண்டபம் தென் கடலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகளுக்கு நாளை (டிச.17) மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும். கடலுக்கு செல்லும் மீனவர்கள் உயிர் காப்பு மிதவை, படகு பதிவு, காப்பீடு சான்று, மீன்பிடி உரிமம், மீனவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம், செல்வி தம்பதியர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் தரணி அண்மையில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை இந்திய துணை ராணுவப் படை பணிக்கு தேர்வாகியுள்ளார். கிராமத்தின் முதல் முறையாக மத்திய அரசு பணியில் சேர்ந்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் பணி உத்தரவு கடிதம் புகைப்படத்துடன் பிளக்ஸ், பேனர் அடிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி தங்கராஜ். இவரிடம் வாட்ஸ்அப்பில் ஆன்லைன் பங்கு வர்த்தகம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என மோசடி நபர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி குழுவில் பங்கு வர்த்தகம் மேற்கொண்ட தங்கராஜிடம் இருந்து பணம் பெற்று ரூ.18 லட்சம் மோசடி செய்தனர். தங்கராஜ் அளித்த புகாரின்படி ராமநாதபுரம் சைபர் க்ரைம் போலீசார் மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் பணத்தை முடக்கியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து(டிச.14) மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் மணிவண்ணன் என்பவரது விசைப்படகு 3 கடல் மைல் துாரம் சென்ற போது சூறாவளி வீசியதால் கடல் கொந்தளிப்பில், படகில் கடல்நீர் புகுந்ததால் படகு கடலுக்குள் மூழ்க துவங்கியது. அவ்வழியாக வந்த மற்றொரு படகு மீனவர்கள், உயிருக்கு போராடிய 7 மீனவர்களை மீட்டு ராமேஸ்வரம் கரைக்கு கொண்டு வந்தனர். மூழ்கிய படகை மீட்க ஓரிரு நாளில் மீன்வளத்துறை மூலம் மீட்க முயற்சி.
இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சியானது உருவாகியுள்ளது. இச்சுழற்சி வலுப்பெற்று டிச.17ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியை நோக்கி நகரும். இந்தப் புதிய காற்றழுத்த சுழற்சியால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவாடானை தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வும் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரான கப்பலூர் கே.ஆர். ராமசாமி இன்று (டிச.15) சென்னையில் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் ஈவிகேஎஸ் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் என்றும், தன்மானத்துடன் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு அயராது உழைத்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
Sorry, no posts matched your criteria.