India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொண்டி பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கு கடந்த15.9.2024-அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. சிறுமி அளித்த புகாரின் பேரில் கணவர் உள்பட 3பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருவாடானை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இன்று (20.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 27.12.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் குடும்பத்தை சார்ந்தோர் கோரிக்கை மனு (இரட்டைப் பிரதிகளுடன்) நேரில் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ராமேசுவரம் – ஹூப்ளி – ராமேசுவரம் சிறப்பு ரயில் டிசம்பா் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2025 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹூப்ளி – ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355)சனிக்கிழமை காலையில் ஹூப்ளியில் இருந்தும், ஞாயிற்றுகிழமை இரவு ராமேஸ்வரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிக்கப்பட்டுள்ளது
கடலூர் சங்கங்குடியை சேர்ந்தவர் சங்கீதா(38). இவரிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ராமநாதபுரம் வடக்கு தெரு முத்துராமலிங்கம்(60), காட்டூரணி ஓய்வுபெற்ற குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் கௌசல்யா(60) ஆகியோர் ரூ.17 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டனர். சங்கீதா புகாரின்படி ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். கௌசல்யாவை தேடி வருகின்றனர்.
தாம்பரத்திலிருந்து ராமநாதபுரம் வரும் சிறப்பு ரயில் (வ.எண் : 06103) டிசம்பர் 26, 28 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வ.எண் : 06104) டிசம்பர் 27, 29 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இதற்கு ஏற்ப பயண திட்டத்தை வகுத்து கொள்ளவும்.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி மெஹ்பூப் அலி கான் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டல் படி, சிறை லோக் அதாலத் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் பிரசாத், நீதிபதி பிரபாகரன் தலைமையில் ராமநாதபுரம் சிறையில் நடந்த 3 அமர்வுகளில் 22 பேர் பங்கு பெற்றனர். இதில் 6 பேருக்கு வெளியே செல்லும் அனுமதி வழங்கப்பட்டது.
ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண் : 07355) ஜன.4, 2025 முதல் ஜூன் 28, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் – ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண் : 07356) ஜன.5, 2025 முதல் ஜூன் 29, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரம் மட்டும் எஞ்சியுள்ளதால் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துவங்கப்படலாம் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவ சாகுபடி பயிர்களுக்கு தேவையான யூரியா 2,510 மெ.டன், டிஏபி 389 மெ.டன், பொட்டாஷ் 313 மெ.டன், காம்ப்ளக்ஸ் 1,580 மெ.டன் உரங்கள் இருப்பு வைத்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பா பருவத்திற்கு தூத்துக்குடியிலிருந்து 891 மெ.டன் யூரியா உர மூடைகள் பெறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இன்று சந்தித்தார். பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும், சென்னை – ராமேஸ்வரம் இடையே பகல் நேர ரயில் இயக்க வேண்டும், தங்கச்சிமடம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நவாஸ் கனி எம்பி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.