Ramanathapuram

News December 26, 2024

மருத்துவர்களை நியமிக்க நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

image

தொண்டி அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வரும் நிலையில் டிச.30 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இன்று தொண்டி காவல் நிலையத்தில் தாசில்தார் அமர்நாத், டி.எஸ்.பி சீனிவாசன் முன்னிலையில் மக்கள் நல பணி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் டாக்டர்கள் நியமிக்க கால அவகாசம் தேவை என அதிகாரிகள் கூறியதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

News December 26, 2024

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 41 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று இறுதியாக இயற்கை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு மழைநீர் சேகரிப்பு குறித்த மாணவர்கள் பேரணி சிறப்பாக நடைபெற்றது. இந்த பேரணியை ஆயிரவைசிய சபை தலைவர் ராசி என்போஸ் துவக்கி வைத்தார்.

News December 26, 2024

புற்றுநோய் கண்டறிவதில் முதலிடம்

image

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டம் 99.82 சதவீதம் வரை நோய் கண்டறியும் பணிகளை செய்துள்ளது. இத்திட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 672 பேர் பயனடைகின்றனர். மேலும் புற்று நோய் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு இருந்தால் மாத்திரைகள் 2 மாதங்களுக்கு வீடுகளுக்கு சென்று வழங்கப்படுகின்றன.

News December 25, 2024

இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இன்று (25.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 25, 2024

கட்டுமானத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

கட்டுமானத்தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனுடன் தொழிலாளர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளனர். மேலும் ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்தி குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இராமநாதபுரத்தில் டிச.27ம் தேதி தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

News December 25, 2024

கட்டுமானத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

கட்டுமானத்தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனுடன் தொழிலாளர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளனர். மேலும் ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்தி குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இராமநாதபுரத்தில் டிச.27ம் தேதி தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

News December 25, 2024

வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

image

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2 மாதம் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18-35 வயது வரை உள்ள 10, +2, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலை தேடும் இருபாலரும் பங்கேற்கலாம். ஏ.சி., சர்வீஸ், காஸ் சார்ஜிங், பிரிட்ஜ் பழுது நீக்குதல், லேப் டெக்னீசியன், ஜெனரல் டூட்டி நர்ஸ் உதவியாளர் பணிக்கு ராமநாதபுரம் ஜாஸ் தொழில் பள்ளியில் டிச 3இல் விண்ணப்பிக்க வேண்டும்.

News December 24, 2024

இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இன்று (24.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 24, 2024

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் பள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் கேணிக்கரை சார்பு ஆய்வாளர் தங்க ஈஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். கோவை வடக்கு பதிவெண் சரக்கு வாகனத்தில் தலா 40 கிலோ வீதம் 35 மூடை ரேஷன் அரிசியை கைப்பற்றினர். இது தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந் டிரைவர் கணேஷ் பாபு (42) திருப்புல்லாணியைச் சேர்ந்த அஜித் குமார் (28) ஆகியோரை கைது செய்தனர்.

News December 24, 2024

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை

image

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பக்தர்களுக்காக இராமேஸ்வரம் கோவில் உட்பிரகாரத்தில் தீர்த்த தொட்டி அருகே ஒரு உடை மாற்றுவதற்கான கட்டடமும், அக்னி தீர்த்தம் கடற்கரை எதிரில் ஒரு உடை மாற்றுவதற்கான கட்டடமும் செயல்பட்டு வருகிறது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனியார் இடங்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!