India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற அரசு உதவி பெறும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை இன்று தூத்துக்குடியில் முதல்வர் தொடங்கிவைத்தார். அதைதொடர்ந்து இராமநாதபுரத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் ஆமை முட்டைகளுக்கான குஞ்சு பொரிப்பகம் அமைக்கப் பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை பச்சையாமை, பேராமை, சித்தாமை ஆகியவை வாழ்கின்றன. டிசம்பர், கடைசி வாரம் முதல் ஜன வரி, பிப்ரவரி மாதங்களில் ஆமைகள் கடற்கரையோ ரங்களில் முட்டையிட்டு செல்கின்றன. கீழக்கரை, சாயல்குடி வனச்சரகத் திற்கு உட்பட்ட 6 இடங் களில் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.என்றனர்
இன்று (29.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற நாளை (30.12.2024) காலை 10.00 மணியளவில் கேணிக்கரை காவல் நிலையம் அருகில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு 8438939372 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் இன்று(டிச.29) 110 SPORTS ACADEMY மற்றும் வில்வா பேட்மிண்டன் கிளப் நண்பர்கள் நடத்தும் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் டிஎஸ்பி சின்னக்கண்ணு, வட்டாட்சியர் சடையாண்டி சேர்மன் ஷாஜகான், அப்துல் ரகீம், காதர் முகைதீன், துறைப்பாண்டியன், ரமேஷ்குமார், முகமது இக்பால், இராமபாண்டியன், ஜஹீபர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 4.1.2025 சனிக்கிழமை நடைபெறுகின்றது.
காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
பரமக்குடியில் மதுரை – மண்டபம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் அரசு ஐ.டி.ஐ அருகில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம். தங்களது பயோடேட்டா, ஆதார் கார்டு அவசியம். *ஷேர் செய்யவும்*
ராமநாதபுரம், நம்புதாளையைச் சேர்ந்த விஜய் மகன் 6ம் வகுப்பு படிக்கும் மனோஜ்(12) . மனோஜ் டிச.,26 மதியம் மணிக்கு, அவரது மாமா நாகேந்திரன் வீட்டிற்கு விளையாட சென்றார். வீட்டில் ஜன்னல், பீரோ இரு பக்கமும் கயறு கட்டி ஊஞ்சல் விளையாடியபோது பீரோ சிறுவன் மீது விழுந்தது. இதில், காயமடைந்த சிறுவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (டிச,29) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (டிச,28) இராமநாதபுரம் வருகை தந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர்.கே கார்மேகம் இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது நகர் மன்ற தலைவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி 2025 ஜன.,5ல் பட்டணம்காத்தான் இசிஆர் 4 வழிச்சாலையில் 2 பிரிவுகளில் நடைபெற உள்ளது. 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ., (ம) 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ., நெடுந்தூர ஓட்டப்போட்டி நடக்கிறது. விளையாட்டு அலுவலகத்தில் ஜன.4 மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் நடிகர் இயக்குனர் தாயாரிப்பாளருமான சசிகுமார் இரண்டு நாள் படப்பிடிப்புக்கு வருகை தந்து படப்பிடிப்பு முடித்து இன்று(டிச.28) ராமேஸ்வரத்தில் ஶ்ரீ ராமநாதசுவாமி ஆலயத்தில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம் செய்து ஆலயத்தில் இருந்து பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றார்.
Sorry, no posts matched your criteria.