Ramanathapuram

News February 14, 2025

அமைச்சர் ராஜா கண்ணப்பன் இலக்கா திடீர் மாற்றம்

image

முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் பால்வளம் மற்றும் கதர் தொழில் வாரியத் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சரின் பரிந்துரைப்படி கதிர் மட்டும் கிராமத் தொழில் வாரியத்தை அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இனிமேல் பொன்முடி வனம் மற்றும் கதர் துறை அமைச்சராக இயங்குவார். அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக இயங்குவார்.

News February 14, 2025

ராமநாதபுரத்திற்கு வருகை தரும் அமித்ஷா & மோடி

image

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,தலைவர் முரளிதரன் கூறுகையில், ராமநாதபுரம் அருகே புதிதாக கட்டப்பட்டிருக்கும் பா.ஜ., கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க, பிப்.26ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வருகிறார். அதேபோல, பிப்.28ல், பாம்பன் புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்பணிக்க பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.

News February 13, 2025

மீனவர் குறை தீர்ப்பு கூட்டம் நேரம் மாற்றம்

image

நாளை (பிப்.14) காலை 10:30 மணிக்கு ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர் நாள் கூட்டம் நாளை மாலை 3:30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்,விசைப்படகு, நாட்டுப்படகு, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சற்று முன் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

திமிங்கலத்தின் எச்சம் கடத்தல்; 6 பேர் கைது 

image

இராமநாதபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மேலக்கோட்டை விலக்கு சாலை அருகே அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கிலத்தின் உமிழ்நீரை கடத்திய 6 குற்றவாளிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்படி கைது செய்துள்ளனர். 4 கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 4 கோடி என மதிப்பிடப்படுகிறது.

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி காலிபணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் நாளை(பிப்.14). <<-1>>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணபிக்கவும் *பிறரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்

News February 13, 2025

பிப்.14ல் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

image

இராமநாதபுரத்தில் வரும் (14/02/2025) அன்று காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து அதற்கான தீர்வை பெற்றிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2025

இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

இன்று (12.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இராமநாதபுரம், கீழக்கரை, இராமேஸ்வரம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.

News February 12, 2025

133 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

image

ராமேஸ்வரம் தெற்கு கரையூரில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (பிப்.12) நடந்தது. இதில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 133 பயனாளிகளுக்கு ரூ. 42.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். ராமேஸ்வரம் நகர் மன்றத்தலைவர் நாசர்கான் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

News February 12, 2025

ஹூப்ளி – ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை ரத்து

image

ஹூப்ளி – ராமேஸ்வரம் (வ.எண் 07355) ராமேஸ்வரம் – ஹூப்ளி (வ.எண் 07356) வாராந்திர சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து சேவை வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இவ்விரு ரயில்கள் மண்டபம் – ஹூப்ளி – மண்டபம் வரை தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

News February 12, 2025

இனி சாலைகளில் கால்நடைகள் திரிந்தால்.. அதிரடி

image

திருவாடானை யூனியனில் உள்ள 47 கிராம ஊராட்சியில் பொது மக்களுக்கு இடையூறாகவும் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியமேரி சாராள் சாலையில் திரியும் கால்நடைகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!