India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று(ஜன.21) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரத்தை அடுத்த சூரங்கோட்டை ஊராட்சியில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் சக்திராஜன். இவர் ஊராட்சியில் நடக்கின்ற முறைகேடு குடுத்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி ஊராட்சிமன்ற தலைவர் சக்திராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு,தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.24 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. விருப்பமுள்ள வேலைநாடுநர், மாற்றுத்திறன் வேலைநாடுநர், வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர் செய்யுங்கள்*
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.21) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.27 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.25 அன்றும் நடைபெறவுள்ளன. கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தை திருநாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரம் கபடி கழகம் நடத்தும் மாபெரும் கிராமிய கபடி போட்டி ஜன.22 & 23 ஆகிய தேதிகளில் காலை 6 மணியளவில், செயற்கை ஆடுகளத்தில் கீழக்கிடாரம் கிராம பொதுமக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.20,001, இரண்டா பரிசாக ரூ.17,001, மூன்றாம் பரிசு ரூ.14,001, நான்காம் பரிசு ரூ.10,001, ஐந்து, ஆறு, ஏழு மற்றும் எட்டாம் பரிசாக ரூ.5,001 வழங்கப்படவுள்ளது.
பரமக்குடியை சேர்ந்த ரமேஷ் பாபு இன்று பரமக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று குற்றவியல் நீதிபதி அமர்ந்திருக்கும் நாற்காலியை நோக்கி செருப்பை வீசியுள்ளார். அதன் பின்பு போலீசார்கள் ரமேஷ் பாபுவை தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து ரமேஷ் பாபுவை பரமக்குடி டவுன் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட போது இவர் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசியின் சகோதரர் என தெரியவந்தது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.20) இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டிஎஸ்பி சாந்த மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவசர உதவிக்கு 100 ஐ அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நகர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இராமேஸ்வரம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும், பாம்பன் புதிய ரயில் பாலத்தை விரைவில் திறக்க வலியுறுத்தியும் வருகிற (ஜன.28) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த 15 வயது மாணவி . ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பள்ளி செல்ல வேண்டிய அவர் பள்ளிக்கு செல்ல முடியாது என கூறினார். இதனால், மாணவியை அவரது தாயார் கண்டித்ததால், மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.