India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி பிருந்தா தேசிய அளவில் வீர் கதா போட்டியில் வென்றுள்ளார். இதனை ஒட்டி அவர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாணவியை முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு பரிசு வழங்கி பாராட்டினார். உடன் தலைமை ஆசிரியர் யுனைசி, வழிகாட்டி ஆசிரியர் வளர்மதி ஆகியோர் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ராம்நாடு கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 8 ஆண்டுகளாக கட்சியின் உறுப்பினராகவும் கிழக்கு மாவட்ட தலைவராகவும் பணியாற்றினேன். சமீப காலமாக கசப்பான சூழ்நிலை காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் ராட்சத மரக்கட்டை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக புலனாய்வு பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்ததில் சுமார் 74 அடி நீளமும், 6 அடி விட்டமும் கொண்ட அளவில் இருந்துள்ளது. மேலும், அந்த மரக் கட்டை ‘பதாக்’ எனப்படும் மர வகையினை சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது. சரக்கு கப்பலில் இருந்து விழுந்ததா என விசாரணை செய்கின்றனர்.
தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் வனத்துறை மூலம் ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டுவரும் மையத்தை பார்வையிட்டு ஆமைகள் பராமரிப்பு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-25 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கேட்டறிந்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் முஹமது ஷா நாவாஸ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எழிலரசன், சந்திரன் சேகர் ஆகியோர் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பணிபுரியும் பொறியாளர் பாரதி கண்ணன் தனது வாடிக்கையாளர்களுக்கு பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டுமனைகளுக்கு நகராட்சியில் பிளான் அப்ரூவல் பெறுவதற்கு டவுன் பிளானிங் அலுவலர் பர்குணனை அணுகிய போது 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இன்று (ஜன.23) பாரதி கண்ணன் பர்குணனுக்கு GPay மூலம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் அனுப்பிய பொழுது லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
இன்று (ஜன. 22) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட அரசுத் துறை ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் பிப்.6 காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முன்னோடிகளாக ஓய்வூதியர் குறை தீர் நாள் மனு, மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் என முகவரியுடன் 2 பிரதிகளை ஜன 31க்குள் அனுப்பலாம் விண்ணப்பம் அனுப்பும் ஓய்வூதியர் குறை தீர் நாள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர்
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2024 டிச.12 ல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் 8 பேரின் வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஜமீல், மீனவர் 8 பேரை விடுதலை செய்தார். படகோட்டிகள் இருவருக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம் (அ) 6 மாதம் சிறை, மீனவர் 6 பேருக்கு தலா ரூ.50 லட்சம் அபராதம் (அ) 4 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். .
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.22) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
திருவாடானை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் தலைமையில் தொண்டி வெள்ளைமணல் தெருவில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஆய்வு நடத்தினர்.இத்தெருவில் ரேஷன் கடை அருகே மளிகை கடை நடத்தும் பீர்முகமது 66, வீட்டில் 35 சாக்கு மூடைகளில் 500 கிலோ ரேஷன் அரிசியும், ரசீனா 60, வீட்டில் 10 பிளாஸ்டிக் டிரம்களில் 400 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.