India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஜன. 26) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ரத்தானதை தொடர்ந்து கிராம மக்களை சந்திக்க மதுரை விமான நிலையம் வருகை தந்தார். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை வரவேற்றார்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், இந்நிலையில் மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதில் 34 மீனவர்களை மீட்க வேண்டும், தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கை எடுக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இன்று (ஜன,26) இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் (ஜன,12) சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதி ஜெகநாதர் ஆலயத்தில் இன்று திரைப்பட நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்பு நடிகர் வடிவேலு ஆலயத்தை சுற்றி வலம் வந்து தரிசனம் செய்தார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் 2 விசைபடகுகளையும் பறிமுதல் செய்தது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 6 பேருக்கு ரூ.55.71 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் 2 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், 74 பேருக்கு மகளிர் சுய உதவி குழு கடன், 10 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை, 2 பேருக்கு மின்கல தெளிப்பான், 3 பேருக்கு தையல் இயந்திரம், 2 பேருக்கு படகு சேத நிவாரணத்தை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.26) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவிற்கு இன்று (ஜன.26) இந்தியா நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் சமூக நல்லிணக்கத்திற்கான அமீர் கோட்டை விருதை பெற்றுக் கொண்டார். இவர் கொரோனா காலத்தில் 700க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில்முறை வல்லுநர் 1 ஆண்டு பணியிடம் (மாதம் ரூ.50,000 தொகுப்பூதியம்) தேர்வு செய்யப்பட உள்ளது. https://ramanathapuram.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் சுய விவர படிவத்தை நிரப்பி மாவட்ட ஆட்சியர், மாவட்டப் புள்ளியல் அலுவலகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு ஜன.28 மாலை 5 மணிக்குள் அனுப்பலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். *ஷேர்
Sorry, no posts matched your criteria.