India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சிவன் கோயில், பழமையும் புரதான சிறப்பும் பெற்றது. இதிகாசத்துடன் நெருங்கிய தொடர்புள்ள இக்கோயில் ஆதி சிவன் கோயில் என அழைக்கப்படுகிறது. 2010 ல் ராஜகோபுரம் & அம்மன் கோபுரங்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மங்களநாதர் சன்னதியில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்.,4 கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனை *ஷேர் செய்து நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று(மார்ச்.04) தற்காலிகமாக காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை பிறருக்கு தெரிவிக்க இதனை ஷேர் செய்யுங்கள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 04) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையுடன் வெப்பநிலை உயர்ந்து காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு பகல் நேர வெப்ப நிலையானது இயல்பை விட 2டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 36டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இராமநாதசுவாமி கோவிலில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அரியமான் கடற்கரை (எ) குஷி கடற்கரை. 150 மீ அகலமும், 2 கி.மீ நீளமும் உடைய அரியமான் கடற்கரையில் குறைந்த உயரத்தில் அலைகள் எழும்புவதால், பலரும் விரும்பி குளிக்கின்றனர். மேலும் இந்த கடற்கரையின் சிறப்பே இந்த கடற்கரையில் நீர் தெளிவாக இருக்கும் என்பது தான். இராமநாதபுரத்தின் சிறப்பான இடங்கள் குறித்து நீங்களும் எழுதி அனுப்பலாம். *ஷேர்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.6 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தியும், சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின ஊதியத்தொகை ரூ. 350லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும், மீனவர்களின் பிரச்னை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் தீர்வு காண வலியுறுத்தவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். *ஷேர்
இன்று (மார். 03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர் உடையத்தேவர், பிரான்ஸ் நாட்டு பொறியாளர் உதவியுடன் குண்டாற்றின் கரையில் கமுதி கோட்டையை கட்டினார். அதனால் இப்பகுதி கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்டையிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதன் வாயிற்பகுதி சிமெண்ட் கற்களால் அடைக்கப்பட்டுள்ளது. *ஷேர் செய்யுங்கள்
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <
திருவாடானை சேர்ந்தவர் சின்னப்பொன்னு 25. நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து தொண்டிக்கு பஸ்சில் சென்றார். அவருடைய குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் தாயத்து, பர்சிலிருந்த ரூ.5000 திருடு போனது.அப்போது பஸ்சிலிருந்து இறங்கி தப்பிக்க முயன்ற பெண்ணை மற்ற பயணிகள் பிடித்தனர். விசாரணையில் பேராவூரணியை சேர்ந்த தேன்மொழி 55, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து பணம், நகையை கைப்பற்றினர்.
Sorry, no posts matched your criteria.