India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாடானை வட்டம் மங்களக்குடி ஊராட்சி ஊமை உடையான் மடை கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ. இவர் ஆர்டிஐ பயிற்சியாளராகவும் விளங்கி வருகிறார். மதுரை மத்திய சிறையில் பொது மன்னிப்பு முன் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரியிருந்தார். அதற்கு கிடைத்த தகவலில் 337 பேர் முன் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் பரமக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று மண்டல திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு இயக்குனநரகம் இணைந்து நடத்தும் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் ஐடிஐ, எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத அனைவரும் கலந்து கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில்முறை வல்லுநர் 1 ஆண்டு பணியிடம் (மாதம் ரூ.50,000 தொகுப்பூதியம்) தேர்வு செய்யப்பட உள்ளது. https://ramanathapuram.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் சுய விவர படிவத்தை நிரப்பி மாவட்ட ஆட்சியர், மாவட்டப் புள்ளியல் அலுவலகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு ஜன.28 மாலை 5 மணிக்குள் அனுப்பலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். *ஷேர்
முதுகுளத்தூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி – முதுகுளத்தூா் அரசுப்பேருந்து பைக் மீது மோதியது. இதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி 5 மாத குழந்தை ருத்ரன் உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த தாய் சத்யாவும், பாட்டி செல்வியும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு செல்வி உயிரிழந்தாா். எமனேசுவரம் போலீசார் வழக்குப்பதிந்து பேருந்து ஓட்டுநா் கதிரேசனை கைது செய்து விசாரிக்கின்றனா்.
சக்கரக்கோட்டையை சேர்ந்தவர்கள் முத்து, மனைவி ராஜாத்தி(55). 2024 ஜன.26ல் ராஜாத்தி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். தாயின் நினைவாக அவரது குடும்பத்தினர் ரூ.6 லட்சத்தில் வீட்டருகே கோயில் கட்டி 6 அடி உயரத்தில் ராஜாத்தியின் பைபர் சிலை அமைத்துள்ளனர். முதலாம் ஆண்டு நினைவு நாளில் (ஜன.,26) திறப்பு விழா நடந்தது. அமைச்சர்கள் ராஜேந்திரன், கீதாஜீவன், அரசு அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இன்று (ஜன. 27) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என ராமநாதபுரம் காவல் துறை தனது வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தேர்தல் ஜன.6ல் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பொதுச்செயலர்கள் ஆத்ம கார்த்திக், பவர் நாகேந்திரன், பால கணபதி, து.தலைவர்கள் லண்டன் கேசவன், ரமேஷ் பாபு, முத்துச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கதிரவன், ஓபிசி அணி மாநில செயலர் முருகன், முன்னாள் மாவட்ட பொ.செ குமார் உள்பட 19 பேர் போட்டியிட்டனர். இதில் கே.முரளிதரன் மாவட்ட தலைவராக இன்று அறிவிக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜன.31 அன்று காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். விவசாய கோரிக்கைகள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர்
ராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் 76 வது குடியரசு தின விழா நேற்று (ஜன.26) நடந்தது. இதில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 72 போலீசாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 92 போலீசாருக்கு நற்சான்று, சிறப்பாக பணியாற்றிய அரசின் பல்வேறு துறை அலுவலர் 210 பேருக்கு நற்சான்று என 374 பேருக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கா லோன் பதக்கம், சான்று வழங்கினார்.
ராமநாதபுரத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற குடிசை வீட்டில் வசிப்பவராகவும், பட்டா பயனாளியின் பெயரில் இருக்க வேண்டும். திட்ட கணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். சொந்த வீடு, அரசு பணி பெற்றவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இதன் மூலம் 11 யூனியன்களில் 2,400 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக. கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.