Ramanathapuram

News January 30, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.30) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 30, 2025

கச்சத்தீவு செல்ல பக்தர்களுக்கு விண்ணப்பம் விநியோகம்

image

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆடித்திருவிழாவானது மார்ச்.14,15ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை, இந்தியா இருநாட்டு மக்களும் கலந்து கொள்ளும் திருவிழாவாகும். இதற்கு இந்திய பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ள நிலையில் கச்சத்தீவு செல்ல விருப்பமுள்ளவர்களுக்கு பிப்.6 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என வேர்க்கோடு பங்குதந்தை கூறியுள்ளார். *ஷேர்

News January 30, 2025

பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் பணி மும்முரம்

image

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ராமநாதபுரத்தில் கடந்த 2016 – 2020-ஆம் ஆண்டுகள் வரை 13,718 வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டன. இவற்றில் 12,535 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. (நிலுவையில் 1,183 – முழு தவணைத் தொகை வழங்கப்பட்டும்), 784 பயனாளிகள் வீடுகளைக் கட்டவில்லை. இந்நிலையில், 11 ஒன்றியங்களில் வீடுகள் கட்ட பணம் பெற்றவா்களிடம் இதை திரும்ப வசூல் செய்யும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News January 29, 2025

கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்

image

இராமநாதபுரம் மாவட்டம் சின்னகடை நாகநாதபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்.02ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜன.29) மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் 15வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை கோவில் நிர்வாகத்திடம் நன்கொடை வழங்கினார். கோவில் கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர் நன்கொடை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 29, 2025

கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: மண்டபம், திருப்புல்லாணி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூர், நயினார்கோயில், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய 11 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் 1.2.2025 – 14.2.2025 வரை கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்பு துறையினரால் நடக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார். *ஷேர்

News January 29, 2025

ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பில் மாற்றம்!

image

ஒவ்வொரு ஆண்டும் தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் வருவர். இந்நிலையில் நாளை(ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு, கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு பின் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்

News January 28, 2025

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா – ஆலோசனை

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று(ஜன.28), கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் வேர்க்கோடு பங்குதந்தை முன்னிலையில் நடைபெற்றது. இதில் இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News January 28, 2025

முதுகுளத்தூர் கோர்ட்டில் ஆஜரான ஜான்பாண்டியன்

image

முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் 2021-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கீர்த்திகா முனியசாமிக்கு ஆதரவாக தமிழ் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் தேர்தல் விதிகளை மீறி கொடி, பேனர் மற்றும் வாகனங்கள் அதிகமாக கொண்டு சென்றதால் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஜான்பாண்டியன் ஆஜரானார்.

News January 28, 2025

ராமநாதபுரத்தில் 2 வாரம் கோழிகழிச்சல் தடுப்பூசி முகாம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி இரு வார முகாம் பிப்.1 முதல் பிப்.14ஆம் தேதி வரை கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் 2.77 லட்சம் டோஸ் கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படவுள்ளது. கோழி வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

வேலூர் இப்ராஹீமை குண்டாஸில் கைது செய்ய வலியுறுத்தி மனு

image

ராமநாதபுரம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் மாவட்ட தலைவர் ஷாஜகான், பொதுச்செயலாளர் ஜெய்னுல் ஆலம், துணைத் தலைவர் அப்துல் முத்தலிப், பொருளாளர் பக்ருல் அமீன் ஆகியோர் இன்று மாவட்ட SP சந்தீஷ்யை சந்தித்து மனு அளித்தனர். அதில், எம்பியை அவமரியாதை செய்த வேலூர் இப்ராஹீமை குண்டாஸில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திருந்தனர். பல்வேறு பகுதிகளிலும் வேலூர் இப்ராஹீம் மீது வழக்கு பதியப்படுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!