India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் ஆட்சியர் கூட்ட அரங்கில் பிப்.5, அன்று நடைபெறும் சமூக நலன், மகளிர் உரிமை தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
திருவாடானை யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமுருகன் பதவி உயர்வு பெற்று மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மண்டபம் பி.டி.ஒ. நடராஜன் கலெக்டர் அலுவலகத்திற்க்கும்,போகலூர் பி.டி.ஒ. முத்துராமலிங்கம் கமுதி யூனியனுக்கும், போகலூர் பி.டி.ஒ.(வ.ஊ )திருநாவுக்கரசு. போகலூர் கிராம ஊராட்சி.பி.டி.ஒ.வாகவும் பணி மாறுதல் செய்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் தங்கள் குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பரமக்குடியில் உணவு பாதுகாப்பு துறையினர் 15க்கும் மேற்பட்ட புரோட்டா கடைகள் மற்றும் உணவகங்களில் நேற்று (பிப்.3) திடீரென ஆய்வு செய்தனர். ஆய்வில் சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த உணவகங்கள், புரோட்டா கடைகளுக்கு தலா ரூ.1000, ரூ.2000 வீதம் அபராதம் விதித்தனர். சுவைக்காக அஜினா மோட்டோ சேர்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் கடைகளில் இருந்து உணவு மாதிரிகளை பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பரமக்குடி அருகே அலங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் மேலபெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த குஷியாகாந்தி என்பவருக்கும் மேலபெருங்கரை சொக்கநாதர் ஆலயத்தில் இன்று (பிப்.3) திருமணம் நடைபெற இருந்தது. காலை திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரும் வராமல் இருந்ததால் பெண் வீட்டார் பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
RVCE Institution மற்றும் Student.com சார்பில் ராமநாதபுரத்தில் நேற்று (பிப்.02) நடைபெற்ற விழாவில் கணினி அறிவியல் பாடத்தில் கடந்த 18 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று தந்த பணியை பாராட்டி ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை முஹமதியா மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியை ஜனாபா சீனி அஸ்ரா ரீனாவுக்கு பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் Inspirational Teacher Award வழங்கி கௌரவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு கடல் பகுதியில் இருந்து நேற்று (பிப்.2) காலை தொழிலுக்குச் சென்ற விசைப்படகுகள் இலங்கை மன்னார் தென் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. இதில் ஒரு படகு, அதிலிருந்த 10 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று (பிப்.3) அதிகாலை சிறை பிடித்து மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து இஞ்சி மூடைகள் கடத்தப்படுவதாக இலங்கை கற்பிட்டி போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் கற்பிட்டி போலீசாருடன் இலங்கை சிறப்பு அதிரடி படையினர் இணைந்து ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சம்மட்டி வாடி கடற்கரை பகுதியில் இருந்து கொழும்பிற்கு இஞ்சி மூடைகளை கடத்திக் கொண்டு சென்ற லாரியை மறித்தனர். அதில் 45 மூடைகளில் 1839 கிலோ இஞ்சி இருப்பது தெரிந்து பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (02.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் ஏற்படும் இன்னல்களுக்கு இந்த உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் (அ) 100 ஐ டயல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் தீவில் வசிக்கும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் தாகத்தை காவிரி குடிநீர் தணிக்கிறது. பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் நடைபாதையின் கீழ் குழாய் மூலம் ராமேஸ்வரம் தீவுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பாலம் நடுவில் குழாய் உடைந்து காவிரி குடிநீர் கடலில் கலந்து பல ஆயிரம் லிட்டர் வீணாகிறது. ராமேஸ்வரம்தீவு மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
Sorry, no posts matched your criteria.