India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிம்ரன்ஜீத் சிங் IAS புதிய ஆட்சியராக இன்று(ஜூலை 16) நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வந்த விஷ்ணு சந்திரன் IAS மாற்றப்பட்டு சிம்ரன்ஜீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நகராட்சி நிர்வாகத்தின் கூட்டு ஆணையராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:இந்தாண்டு ஜனவரி முதல் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.மாதத்திற்கு தலா 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.முதுகுளத்துார்,கமுதி,மண்டபம்,ராமநாதபுரம் பகுதிகளில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடத்த முயற்சிக்கின்றனர்.தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
ராமநாதபுரம் வட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சி OVS மஹால், கமுதி வட்டம் ராமலிங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் போகலூர் வட்டம் முத்து செல்லாபுரம் சமுதாயக்கூடம் ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணிவரை நடைபெற இருக்கிறது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை ராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள செட்டி அய்யனார் ஆலய வருடாபிஷேக விழா மற்றும் குதிரை எடுப்பு விழா இன்று நடைபெற்றது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற விழாவில் மண் குதிரைகளை தலையில் சுமந்து கிராம மக்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அதன் பின்பு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பனில் இருந்து கடந்த 1 ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 நாட்டு படகுகள், 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அதன்பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 25 மீனவர்களின் காவலை ஜீலை.29 வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதையடுத்து நேற்று முன்தினம்(ஜூலை.13) 400 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.நடுக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது அங்கு 5 இலங்கை ரோந்து கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்.
ராமநாதபுரம் தமிழகத்தில் அரசுப்பணியாளர்கள் தேர்வணையம் மூலம் குரூப் 1 தேர்வில் முதல்நிலைத் தேர்வு நேற்று 14 மையங்களில் நேற்று நடைபெற்றது. 14 மையங்களில் தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இதில் தேர்வு எழுத 4385 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3003 பேர் தேர்வு எழுதிய நிலையில் 1382 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பரமக்குடி காந்திநகர் செக் போஸ்ட் அருகே போலீசார்கள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இளையான்குடியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது வாகனத்தை சோதனை செய்த பொழுது அவரது பையில் 52 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வைத்திருந்தார். பணத்தை மீட்டு எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார்கள் விசாரணை செய்ததில் மூன்று பேரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.