India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் பாம்பன், மண்டபம், வேதாளை, புதுமடம், கீழக்கரை, ஏர்வாடி, நரிப்பையூர் உள்பட தென் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஜூலை.18) 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 1000 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நாளை(ஜூலை.19) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை, ஐடிஐ , டிப்பளமோ படித்த இளைஞர்கள்,பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுர மாவட்டம், பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சியில் அந்தோணியார்புரம், சூசையப்பர்பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஷால் (23). இவர் நேற்று இரவு அல்லிக்கண்மாய் சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த காதர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முனீஸ்வரன் (23) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் முனீஸ்வரன், விஷாலை அரிவாளால் கழுத்து, தலையில் வெட்டியதில் விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முனீஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள்<
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். ராமநாதபுரத்தை சேர்ந்த 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா பருவத்தில் நெல், பயறு வகைகள். எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், தேட்டக்கலை பயிர்கள் 1 லட்சத்து 85 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான 7377 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட்,காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி அதிகலாபம் பெறலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடலில் காற்றின் வேகம் 45 முதல் 55 வரையிலும் அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் யாரும் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட அமமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலர் மண்டபம் எம்.ஏ. பக்கர், அதிமுகவில் இன்று மீண்டும் இணைந்தார். இந்நிகழ்வில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி, மண்டபம் பேரூர் செயலர் சீமான் மரைக்காயர் ஆகியோர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.