Ramanathapuram

News July 20, 2024

புயல் காரணமாக படகுகள் நிறுத்தம்

image

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 -ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன்காரணமாக 4 ஆவது நாளாக ராமேசுவரம், பாம்பன், தனிஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட விசை படகுகள், 1500 க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் மீன் பிடிக்கச்செல்லாமல் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

News July 19, 2024

உருக்கமாக கடிதம் எழுதி விடை பெற்ற கலெக்டர்

image

ராமநாதபுரம் கலெக்டராக விஷ்ணு சந்திரன் பணியாற்றி வருகிறார். தற்போது பணி மாறுதல் ஆணை வந்துள்ளது. இந்நிலையில், இன்று அவர் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், இராமநாதபுரம் மக்கள் (ம) அனைத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இங்கு கடந்த 1 வருடம் 2 மாதம் பணிபுரிந்துள்ளேன். பணிபுரிந்த காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

சிறுவர்களை பணி அமர்த்தினால் 2 ஆண்டுகள் சிறை

image

ராமநாதபுரத்தில் தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 2 குழந்தை தொழிலாளர்கள், 7 வளர் இளம்பருவ தொழிலாளர்கள் மீட்க பட்டனர். இவர்களை பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 18 வயதிற்குட்பட்ட சிறார்களை பணி அமர்த்தினால் ரூ.50,000 அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

News July 19, 2024

விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவாளருக்கு 5 ஆண்டு சிறை

image

ராமநாதபுரம் உச்சிப்புளியில் 2015 இல் போலீசார் வாகன சோதனையில் 75 சயனைடு குப்பிகள், 600 கிராம் சயனைடு, ரூ.46,200, 1 பவுன் தங்க நகை, 4 ஜி.பி,எஸ், 9 செல்போனை பறிமுதல் செய்து ஸ்ரீரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க திட்ட மிட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ஸ்ரீரஞ்சனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நேற்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News July 18, 2024

மக்களுடன் முதல்வர் முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. இராமநாதபுரம் வட்டம் பட்டணங்காத்தன் கிங்க் பேலஸ் மஹால், முதுகுளத்தூர் வட்டம் தேரிருவேலி பள்ளிவாசல் மஹால், ஆர்எஸ்மங்கலம் வட்டம் சோழந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் நாளை (19/07/24) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்னுசந்திரன் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

வளர்ச்சி பணிகள் குறித்து செயலாளர் ஆய்வு

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உடனிருந்தனர்.

News July 18, 2024

நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நவாஸ்கனி தனது வேட்பு மனுவில், சொத்து விவரங்களை மறைத்திருப்பதாக கூறி அவரது வெற்றியை எதிர்த்து சற்றுமுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார்.

News July 18, 2024

ராமநாதபுரத்தில் ரூ.7 கோடி வரை வர்த்தகம் பாதிப்பு

image

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்ல வில்லை. பாம்பன், மண்டபம், வேதாளை, புதுமடம், கீழக்கரை, ஏர்வாடி, நரிப்பையூர் உள்பட தென் துறைமுகங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 1.50 லட்சம் பேர் வேலையிழந்த நிலையில் சுமார் ரூ.7 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஓ.பன்னீர்செல்வம்

image

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அதில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். இதனை நாளை (19.07.2024) ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்க உள்ளதாக ஆர்.தர்மர் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!