India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். சுதந்திர தின விழாவில் தியாகிகள் கவுரவிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் பணிகளை திட்டமிட்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (27/7/24) மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மத்திய தபால் நிலையம் அருகே நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் இன்று காலை ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்து இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைந்து மீட்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இன்று முதல்வரை சந்தித்தார். அப்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க கோரினார். அதன்பின்னர், மீனவ பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தார். மீனவர்களின் கோரிக்கையை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சிம்ரன்ஜித்சிங் காலோன் என்பவரே நேற்று (ஜுலை 25) இரவு ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து வருகிற சனிக்கிழமை ஜூலை 27 அன்று காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவித்துள்ளார். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அக்டோபர் முதல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரயில்வே பணிகளுக்கு 6 ஆயிரத்து 362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நவாஸ்கனி எம்பி இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முதல் மதுரை பயணிகள் ரயில்கள் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் அரை மணி நேரம் வரை காத்திருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். பரமக்குடியில் இருந்து இரு மார்க்கத்திலும் தினமும் 1000 பேர் வரை பயணிக்கின்றனர். இரு மார்க்கத்திலும் நடைபெறும் வேலைகளால் அனைத்து ரயில்களும் 10 முதல் 30 நிமிடங்கள் வரை நிறுத்த வேண்டியதுள்ளது.இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் சுபாஷ் சீனிவாசன் தன் வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பலகை வைப்பதற்கு அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை கடந்த 2017 முதல் அப்புறப்படுத்தி வருகிறார். தற்போது மரங்களில் ஆணிகளை அடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.