Ramanathapuram

News July 30, 2024

தமிழ்புதல்வன் திட்டம் குறித்து கலெக்டர் ஆலோசனை

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.07.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் தமிழ்புதல்வன் திட்டம் துவங்கவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வி துறை, வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News July 30, 2024

போலீஸ் விசாரணையில் திமுக நிர்வாகிகள்?

image

ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்ராஹிம் கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருடன் தொடர்பில் உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 30, 2024

திமுகாவில் இருந்து சையது இப்ராகிம் அதிரடியாக நீக்கம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தின் சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு துணைத் தலைவர் சையது இப்ராஹிம், திமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தொடந்து செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்சியுடன் எந்தவொரு தொடர்பும் வைக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

எலிகளின் கூடாரமாகும் அம்மா உணவகம்

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பலர் சிகிச்சைக்கு வருகின்றனர்.இங்கு ஏழை எளிய மக்கள் குறைவான விலையில் சாப்பிட அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. பராமரிப்பில்லாததால் அம்மா உணவகம் பழுதடைந்துள்ளது. கட்டிடத்தை சுற்றியுள்ள கழிவு நீரால் எலிகளின் கூடாரமாக உணவகம் மாறியுள்ளது.

News July 30, 2024

ராமநாதபுரம் மீனவர்களின் காவல் நீட்டிப்பு

image

ராமநாதபுரத்தை சேர்ந்த 42 மீனவர்களின் சிறை காவலை மூன்றாவது முறையாக நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 1-ஆம் தேதி மற்றும் 11-ஆம் தேதி ஆகிய இரு தேதிகளில் 42 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏற்கனவே இரு முறை மீனவர்கள் காவல் நீடிக்கப்பட்ட நிலையில் நேற்று மூன்றாவது முறையாக மீனவர்கள் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News July 29, 2024

வில்வித்தை போட்டியில் தங்கம்: மாணவருக்கு பாராட்டு

image

தமிழ்நாடு, புதுச்சேரி ICSE பள்ளிகளுக்கு இடையேயான 17வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான வில்வித்தை போட்டி கரூரில் நடந்தது. இதில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ICSE பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர் ஆர்.வி ஸ்ரீசரணை, கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று பாராட்டினார். டிஆர்ஓ கோவிந்தராஜூலு, விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி உடன் உள்ளனர்.

News July 29, 2024

மக்களுடன் முதல்வர் திட்டம்: கலெக்டர் தகவல்

image

ராமநாதபுரம் ஒன்றியம் – சித்தார்கோட்டை ஊராட்சி, போகலூர் ஒன்றியம் – காமன் கோட்டை ஊராட்சி, நயினார் கோவில் ஒன்றியம் – வாணிய வல்லம் ஊராட்சி ஆகிய பகுதிகள் நாளை (30.7.2024) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News July 29, 2024

கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் 

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.07.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெற்று, மண்டல அளவிலான CISCE விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News July 29, 2024

பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல் 

image

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குயவன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (29.07.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கினார். உதவி ஆட்சியர் (பயிற்சி) மொகத் இர்பான் உள்ளார்.

News July 29, 2024

ஊராட்சி ஒன்றிய அலுவலக திறப்பு விழா

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!