India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்ட விழிப்புணர்வு கூட்டம் வருகின்ற 25ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தில் 2 ஏக்கர் பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடம் அமைக்க தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் 50% அல்லது ரூ.2.50 கோடி (இதில் எது குறைவோ அது) தமிழக அரசு மானியம் வழங்குகிறது என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் கருப்பையா இன்று நிலையாம்படி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் ஊரணியில் மண் வெட்டுவதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி., நவாஸ்கனி வேட்புமனுவில் உண்மை தகவல்களை மறைத்ததாக கூறி அவருக்கு எதிராக ஓபிஎஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், எம்.பி., நவாஸ்கனி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.18) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 5க்கு ஒத்திவைத்துள்ளது.
பெருநாழி அருகேயுள்ள துத்திநத்தம் விலக்கு சாலையில் பெருநாழி போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருநாழியிலிருந்து வந்த யுனோவா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் காருக்குள் அரிவாள், பெப்பர் ஸ்பிரே, உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது மேலும் பெருநாழி பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட வந்ததாக காரில் இருந்த இளைஞர்கள் வாக்கு மூலம் கொடுத்ததை தொடர்ந்து 12 பேரை போலீசார் கைது செய்தனர்
திருச்சி ரயில் நிலையம் அருகே நேற்று(செப்.17) நள்ளிரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸின் கடைசி 3 பெட்டிகள் கழண்டு சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் கழண்ட பெட்டிகளை மீண்டும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொருத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம் உப்பூர் திருப்புல்லாணி தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்கி பருவமழைக்கு முன்னதாக உப்பு உற்பத்தி நடைபெறும். இந்நிலையில் கோடைகாலம் முடிந்து 3 மாதங்களாகியும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாவட்டம் முழுவதும் மீண்டும் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. பருவமழை தொடங்க உள்ளதால் பாத்திகளில் உப்பை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து சென்றபோது மண்டபத்திற்கும் தொண்டிக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் வந்த படகினை சோதனை செய்தனர். அந்த படகில் இருந்த 3 பேரும் இலங்கை யாழ்ப்பாணம் தாலையடி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாலிநோக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மீரான் முகைதீன், 42. இன்றிரவு இவர் டூவீலரில் கீழக்கரையில் இருந்து வாலிநோக்கம் திரும்பினார். கீழக்கரை தாலுகா அலுவலகம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் டூவீலர் மீது மோதியதில் மீரான் முகைதீன் இறந்தார். கீழக்கரை போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள DEO, டிரைவர், கிளீனர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 41 பணியிடங்கள் உள்ள இந்த பணிக்கு 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 24ஆம் தேதிக்குள் இராமநாதபுரம் மாவட்ட சுகாதார அலுவலருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மண்டபம் -கடலூர் மாதாந்திர ரயில் சோதனை ஓட்டம் இன்று (செப்.17) நடைபெற இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6:30 மணியளவில் காரைக்குடி ரயில் நிலையத்தில் புறப்படும் ஆய்வு ரயில் மண்டபம் நிலையத்திற்கு காலை 08:30 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் காலை 9:30 மணியளவில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, மயிலாடுதுறை வழியாக கடலூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.
Sorry, no posts matched your criteria.