Ramanathapuram

News August 13, 2024

ராமேஸ்வரம் கோயில் மோசடி வழக்கு ஒத்திவைப்பு

image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஊழியர்கள், 89 பேரின் வருங்கால வைப்பு நிதியில் கடந்த 2019ல் ரூ.91 லட்சம் மோசடி நடைபெற்றது. இதில் கோயில் முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து 2000 பக்க குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை அடுத்த மாதம் 13க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

News August 12, 2024

ஆளுநரை சந்தித்த தேவேந்திர சேனா அறக்கட்டளையினர்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று காலை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு தங்கியிருந்த அவரை தேவேந்திர சேனா சமூகம் மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து, “தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியலில் இருந்த வெளியேற்ற வேண்டும்” என கோரிக்கை மனுவை அளித்தனர்.

News August 12, 2024

ஆளுநரை சந்தித்த ராமேஸ்வரம் மீனவர்கள்

image

இராமநாதபுரம் விருந்தினர் மாளிகையில் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (ஆக.12) தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில் 6வது சரத்தில் உள்ள மீன்பிடி உரிமையை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தக்கோரியும், இலங்கை கடற்படை இந்திய நாட்டுப்படகுகளை பிடிப்பதை தடுக்கவும், பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்ககோரியும் மனு அளித்தனர்.

News August 12, 2024

இராமநாதபுரம் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இராமநாதபுரம் கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொறியாளர் சஹர்பான் தலைமையில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன்படலாம் என செயற்பொறியாளர் சஹர்பான் தெரிவித்துள்ளார்.

News August 11, 2024

தலைமறைவானவரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள்

image

இலங்கையில் இருந்து 2021 இல் சட்டவிரோதமாக கனடா, ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல 38 பேரிடம் தலா 1 லட்சம் பெற்றுக்கொண்டு கள்ளத்தோணியில் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம் அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக மங்களூர் அழைத்துச் சென்ற நிலையில் 13 பேரை மங்களூர் போலீசார் கைது செய்தனர். இவர்களை மங்களூருக்கு அனுப்பிய சீனி அபுல் கான் என்பவரை நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

News August 11, 2024

பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

image

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த (ஆக,8) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரையும் நான்கு நாட்டு படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி பாம்பன் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

News August 10, 2024

ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி நாளை(ஆக.11) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும். SHARE IT

News August 10, 2024

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை

image

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (ஆக.10) இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தேனி, மதுரை, நெல்லை, விருதுநகர், குமரி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.

News August 10, 2024

இராமநாதபுரத்திற்கு வருகை தரும் ஆளுநர்

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வர்த்தினி மஹால் லெட்சுமண தீர்த்தம் அருகில் வரும் ஆகஸ்ட் 12 மற்றும்13 ஆகிய இரு தினங்கள் 35 ஆம் ஆண்டு கம்பன் தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினா்களாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருக்கின்றனர். இதில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நாட்டியாஞ்சலி, பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

News August 10, 2024

இராமநாதபுரத்தில் ஆக.,31-ல் இருதய மருத்துவ முகாம்

image

கொச்சி அம்ருதா மருத்துவமனை சார்பில் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை அம்ருதா வித்யாலயத்தில் இருதய நோய் பாதித்த 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிகிச்சை பெற விரும்புவோர் 8921508515 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது குழந்தைகளின் பெயரை முன்பதிவு செய்து பயன் பெறலாம் என அம்ருதா மருத்துவமனை மருத்துவர் பாலாஜி முருகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!