Ramanathapuram

News August 26, 2024

ராமநாதபுரத்தில் மாபெரும் கபடி போட்டி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டகை கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நேற்று(ஆக.,25) நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்குபெற்றனர். 2 நாளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு விளையாட்டு குழு சார்பாக ரூ.15,000 பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆட்டநாயகன் விருதை, களரியை சேர்ந்த மணிமாறனுக்கு வழங்கப்பட்டது.

News August 25, 2024

ராமநாதபுரத்தில் ஆக.30ல் ஆர்ப்பாட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் ஆக.30ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

ராமநாதபுரத்தில் பேச்சுப் போட்டி – அழைப்பு

image

ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் வரும் (ஆக.29) பாரதி நகர் பீமாஸ் மஹாலில் ‘என் உயிரினும் மேலான..’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் (ஆக.29) காலை 8 மணிக்குள் முன்பதிவு செய்து மாணவ மாணவியர் கலந்து கொள்ளுமாறு திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

வெறிச்சோடிய இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம்

image

இராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் நேற்று முதல் மீன்பிடி படகுகள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டாவது நாளாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. இந்த மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News August 25, 2024

தனுஷ்கோடியில் புதிய மணல் திட்டு

image

தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால், தனுஷ்கோடி தென் கடலான மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகின்றன. இச்சூழலில் அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா வடக்கு பகுதியில் திடீரென 200 மீ., சுற்றளவில் மணல் திட்டு உருவாகியுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் நின்றபடி கடல் அழகை ரசித்து ஆர்வமுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

News August 24, 2024

திமுக மருத்துவ அணி துணை செயலாளரான அமைச்சர் மகன்

image

தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப் குமார்‌, இன்று(ஆக.,24) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக மருத்துவ அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திமுக நிர்வாகிகள், ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள் திலீப் குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News August 24, 2024

ராம்நாடு இன்ஸ்பெக்டருக்கு விருது

image

மத்திய அரசு உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய அளவில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக செயல்படுபர்களுக்கு விருது, பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு, ராமநாதபுரம் உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தேர்வாகி இருந்தார். இதை தொடர்ந்து சென்னையில் நேற்று(ஆக.,23) நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கூடுதல் தலைமை செயலாளர் மாரியப்பனுக்கு விருது வழங்கி பாராட்டினார்.

News August 24, 2024

உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு விருது

image

மத்திய அரசு உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய அளவில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக செயல்படுபர்களுக்கு விருது, பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு ராமநாதபுரம் உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தேர்வாகி இருந்தார். இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூடுதல் தலைமை செயலாளர் இன்ஸ்பெக்டர் மாரியப்பனுக்கு பதக்கம், விருது வழங்கி பாராட்டினார்.

News August 23, 2024

நடிகை கவுதமி நிலமோசடி வழக்கு ஒத்திவைப்பு

image

நடிகை கவுதமியிடம் சினிமா பைனான்சியர் அழகப்பன், ராமநாதபுரத்தில் நிலம் வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பெற்றுள்ளார். ஆனால் நிலம் வாங்கித் தராமல் மோசடி செய்துவிட்டதாக கவுதமி அளித்த புகாரின்படி ராமநாதபுரம் போலீசார் அழகப்பனை கைதுசெய்தனர். கோர்ட்டு அனுமதியுடன் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணையை வரும் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

News August 23, 2024

கணவன் மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு

image

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஆண்டு தாசில்தாராக பணியாற்றிய தென்னரசு பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைதானார். அவரின் வீட்டில் சோதனையிட்டபோது கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்தனர். அவரும், மனைவி சித்த மருத்துவர் சாந்தியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதன்படி நேற்று ராம்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்

error: Content is protected !!