Ramanathapuram

News September 6, 2024

நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் பாராட்டு

image

ராமநாதபுரம் தாலுகா ராஜசூரியமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நவரெத்தினத்திற்கு நேற்று சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில் மாநில நல்லாசிரியர் விருதினை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 10 ஆசிரியர்களுக்கு விருது வாங்கி கெளரவித்தார் அமைச்சர்.

News September 6, 2024

இராமநாதபுரம் அருகே மதிமுகவில் இணைந்த பொதுமக்கள்

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் காட்டூரணி பகுதியில் நேற்று (செ,05) எந்த ஒரு இயக்கத்தில் சாராத பெண்கள் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ் தணிக்கை குழு உறுப்பினர் குணா ஒன்றிய செயலாளர் பிர்தௌஸ்கான் மற்றும் மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 6, 2024

6 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் வனத்துறை

image

ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை திட்டத்தில் நர்சரி கார்டன்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளது. இதனை நிலம், தண்ணீர் வசதி உள்ள இடங்கள், அரசு அலுவலகம், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மரம் வளர்க்க விரும்பம் உள்ளவர்கள் வாங்கி பயனடைய வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News September 6, 2024

இராமேஸ்வரத்தில் படகிற்கு கட்டணம் – மீனவர்கள் அதிர்ச்சி

image

ராமேஸ்வரத்தில் மீன் இறக்கவும், படகு நிறுத்தவும் ரூ.22 கோடியில் புதிய தளம் அமைக்கப்பட்டு கடந்த ஆக.20ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு சிலர் மது பாட்டில்களை வீசி அசுத்தம் செய்வதால் இரு காவலர்கள், ஒரு துாய்மை பணியாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பாலத்தை பராமரிப்பதற்காக படகிற்கு ரூ.200 தினசரி கட்டணம் வசூலிக்க மீன்துறை முடிவு செய்துள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

News September 6, 2024

ராமநாதபுரம்; நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்

image

இராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர்வேணிக்கு நேற்று, சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில் மாநில நல்லாசிரியர் விருதை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வழங்கி வாழ்த்தினார். அவருடன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 10 பேர் நேற்று நல்லாசிரியர் விருது பெற்றனர்.

News September 5, 2024

பரமக்குடியில் வழித்தடத்தை ஆய்வு செய்த IPS

image

நாளை மறுநாள் விநாயகர் சிலை சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டா.

News September 5, 2024

நல்லாசிரியருக்கு ராதா கிருஷ்ணன் விருது வழங்கிய அமைச்சர்

image

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் (மாநில நல்லாசிரியர்) விருது வழங்கும் விழா சென்னையில் இன்று (செப்.5) நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முனைவர் மு.ஜெயக்குமாருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்.

News September 5, 2024

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவு

image

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்த கொண்டிருந்த 8 மீனவர்கள் மற்றும் 1 விசைப்படகை கடந்த ஆக.26 அன்று இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது., 8 பேரின் காவல் முடிவடைந்ததையடுத்து இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதில், 5 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய விடுதலையும், 3 பேருக்கு தலா ரூ.50,000 அபாரதமும், தவறினால் 6 மாதம் சிறை எனவும் மன்னார் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News September 5, 2024

அதிமுக சார்பில் வ.உ.சிதம்பரனருக்கு மரியாதை

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காட்டு பரமக்குடியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் முழு உருவ வெங்கலசிலைக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் முன்னாள் எம்எல்ஏக்கள் சதன் பிரபாகர், முத்தையா & நகர் மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News September 5, 2024

நடிகை கௌதமி வழக்கு ஒத்திவைப்பு

image

நடிகை கௌதமியிடம், அவரது உதவியாளர் அழகப்பன் ராமநாதபுரம் அருகே நிலம் வாங்கி தருவதாக ரூ.3 கோடி ஏமாற்றியுள்ளார். கௌதமி அளித்த புகாரில் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் அழகப்பனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை நேற்று(செப்.,4) ராமநாதபுரம் கோர்ட்டில் வந்தபோது வீடியோ கான்பரன்ஸ் மூலம் அழகப்பன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை விசாரித்த நீதிபதி பிரபாகரன் வழக்கை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

error: Content is protected !!