India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரமக்குடி அருகே மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கோவையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த காரும், ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதின. இதில், பரமக்குடியைச் சேர்ந்த நாகராஜன், சந்தோஷ் ஆகிய இளைஞர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் நாளை காலை 8.30 வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 18 முதல் 60 வயதுக்கு மிகாதோரை வாரிய உறுப்பினராக சேர்த்தல், புதுப்பித்தல் & நலத்திட்ட உதவி கோரும் மனு பெறும் முகாம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்நாள் அக்.24 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அரங்கில் நடைபெற உள்ளது. உரிய தகுதியுடைய சீர்மரபினர் இனத்தை சார்ந்தோர் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக ஏனாதியை சேர்ந்த வெற்றிமுருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் செய்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் பரிந்துரை செய்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட செயலாளர் தர்மருக்கும் நன்றி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வெங்காயம், கொத்தமல்லி பயிர்களுக்கு 17.01.2025, வாழை பயிருக்கு 28.02.2025, மிளகாய் பயிருக்கு 31.01.2025 வரை காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தி பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி இளஞ்செழியன் கூறியதவது; அக்.30ல் தேவர் ஜெயந்தி குருபூஜை, அரசு விழாக்களில் போலீஸ் அறிவிப்புகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தும் வகையில் டூவிலரில் வருபவர்களை பிடித்து வழக்குப்பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தெற்கு ரயில்வே சார்பில் மண்டபம் ரயில் நிலைய பயணிகள் நலக்குழு ஆலோசனை கூட்டம் இன்று (அக்.19)நடைபெற்றது. இதில் பயணச்சீட்டு முன்பதிவு வசதி வேண்டும், ரயில்வே நிலைய முகப்பை தேசிய நெடுஞ்சாலை பக்கமாக மாற்றிட வேண்டும். பயணிகள் நடந்து செல்ல நடைமேடை அமைத்திட வேண்டும். அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும் என மண்டபம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் (அக்.19)இந்த ஆண்டு 1300 டன் கருப்பட்டி ரூ.28 கோடி மதிப்புக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கருப்பட்டியை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்தால் பனைத் தொழிலாளர் வாழ்வாதாரம் மேம்படும் என ராமநாதபுரம் மாவட்ட பனைத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 2018 கணக்கின்படி சுமார் 2.50 கோடி பன மரங்கள் உள்ளதாகவும், இராமநாதபுரத்தில் 15 லட்சம் பண மரங்கள் உள்ளன.
இராமநாதபுரம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த (செப்.28) அன்று மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் காவல் (அக்.10) நிறைவடைந்த நிலையில் அபதாரம் விதித்து விடுதலை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று(அக்.18) சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். அவர்களை இராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர்கள் வரவேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இந்நிலையில் இன்று (அக்.18) மாதாந்திர குறைதீர் கூட்டமானது ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் விவசாயிகளிடம் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து மனுக்களை அளித்துச் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.