Ramanathapuram

News September 14, 2024

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கல்லூரியில் ஆய்வு

image

இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று(செப்.14) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி II/IIA (Group-II/IIA) முதல்நிலைத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News September 14, 2024

ராமநாதபுரம் மாவட்ட கலைப் போட்டிகள் தொடக்கம்

image

கலை பண்பாட்டுத் துறை, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் ராமநாதபுரம் DD விநாயகர் தொடக்கப் பள்ளியில் மாவட்ட அளவிலான 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்டோர் கலைப்போட்டிகள் இன்று காலை தொடங்கியது. ஆயிர வைசிய மகாசபை தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். பரதம், ஓவியம், பாட்டு, கிராமிய நடனப் போட்டியில் மாணாக்கர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் முனீஸ்வரி, அனந்தமுத்துமாரி, பாலாஜி, ஆகாஷ், தனசேகரன் போட்டிகளை நடத்தினர்.

News September 14, 2024

TNPSC தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு

image

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று(14.09.24) TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்வு மையங்களான இக்கலூரிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். உடன் அரசு அதிகார் இருந்தனர்.

News September 14, 2024

ராம்நாடு பிரபல ரவுடி ஆந்திரா சிறையில் அடைப்பு

image

ராமநாதபுரம் தமிழர் தேசம் கட்சி நிர்வாகியை கொலை செய்ய வந்த 4 பேரை முன்னதாக போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக எஸ்.மாரியூர் மாந்தா லோகேஷ் என்ற ரவுடியை தேடிவந்தனர். சமீபத்தில், 8 கிலோ கஞ்சாவுடன் அவர் ஆந்திராவில் கைதானார். தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் அங்கு சென்று, இங்குள்ள 3 வழக்கிற்காக மாந்தா லோகேசை கைது செய்து ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் நேற்று ஆந்திரா சிறையில் அடைத்தனர்.

News September 14, 2024

ராம்நாடு அருகே ரூ.100 Xerox எடுத்த நபர் கைது!

image

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில், A4 பேப்பரில் ரூ.100 Xerox அடித்து எடுத்துச் சென்ற இளைஞர் கார்த்திக்(25) என்பவர் நேற்று(செப்.13) போலீசாரால் கைது செய்யப்பட்டார். மொத்தம் இவரிடம் எழுபத்தெட்டு A4 பேப்பர்களில் நான்கு 100 ரூபாய் என ரூ.31,200 Xerox அடித்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 13, 2024

ராமநாதபுரத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

image

மதுரையில் வக்கீல் குமரன் தாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபரை பிடித்து ஒப்படைத்தும் கைது செய்யாமல் தப்பிக்க விட்ட அண்ணா நகர் போலீசாரை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தினை உடனடியாக அமல்படுத்த கோரி ராமநாதபுரத்தில் வக்கீல்கள் இன்று(செப்.13) கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வழக்கமான கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டன.

News September 13, 2024

ராமநாதபுரம் ஆட்சியர் விவசாயிகளுக்கு அட்வைஸ்

image

ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜீத் காலொன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராமநாதபுரம மாவட்டத்தில், விவசாயிகள் பெரும்பாலும் டி.ஏ.பி உரத்தை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், டி.ஏ.பி உற்பத்தி குறைந்து, விலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. எனவே, டி.ஏ.பி-க்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட், என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

ராம்நாடு: போலீசார் மீதான விசாரணை ஒத்திவைப்பு

image

மதுரை வெங்கடேசன் என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக 2012ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு வைத்து போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்குப் பதிவு செய்தனர். இதில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். சாட்சிகள் விசாரணைக்கு பின் நீதிபதி (பொறுப்பு)) உத்தமராஜா வழக்கை வரும் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News September 12, 2024

சென்னை – ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

image

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் செப்டம்பர் 19, 21, 23, 26, 28, 30 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து மாலை 05.00 மணிக்கும், செப்டம்பர் 20, 22, 24, 27, 29, அக்.1 நாட்களில் ராமநாதபுரத்திலிருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

பாம்பன் புதிய பாலம் அக்டோபரில் திறப்பு.?

image

மண்டபம் – ராமேஸ்வரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கடந்த 22 மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்க இருக்கிறது. முன்னதாக, அக்டோபரில் பாம்பன் புதிய பாலம் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!